Showing posts with label Poetry. Show all posts
Showing posts with label Poetry. Show all posts

Wednesday, December 14, 2011

YOU AND ME

YOU AND ME

You are within me, yet
Am wandering without you!

You know everything about me, but
I know scarcely a little about you!

You guide me through ups and down, but
I don't even care to stand and stare!

You teach me how to overcome obstacles, but
I always put objection to your suggestion!

You command me to act according to rules, yet
I ignore you often to meet the reality!

You make me realize what life is, yet
Am unable to express life in your way!

You acclaim me forever ,but
I abstain from accepting it!

You strive hard to be present with me ever, but
I neglect your presence everywhere!

You keep on coming as my absolute well wisher, but
I treat you as an obsolete!

It is obvious that you and me are inseparable, yet
it is difficult to fulfill the disparity that set us apart!

Regardless of all the controversies...,
still you are within me,
my amicable CONSCIENCE!

Friday, November 25, 2011

புலம்பல்கள்

புலம்பல்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கி இருக்கிறோம்...

இக்கரைக்கு அக்கரை பச்சை....
-தமிழ்நாடு

கன்னிப்பெண் கண்ணீர் சிந்த
நீதிபதி களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்..
-பாரதம்..

ஊர் பற்றி எரிகிறது
மன்னன் பிடில் வாசிக்கிறான்...
-பாரதம்
-ரஞ்சித்குமார்

பாமரன்

பாமரன்

இது ஒரு அழகிய கூத்து
அழுகிய நாத்து.....

கறை படியாத மேகங்கள்
கருமை நிறமில்லா காகங்கள்.....

அணிந்தவன் நிர்வாகி
அணிவித்தவன் நிர்வாணி .....

பங்கு போட்டுத்தான் பந்தி
பாமரன் நிற்கும் இடம் சந்தி.....

தேடி சொன்னால் பல கோடி
தெருவில் கண்டது சில கோடி.......


மொத்தத்தில் ஒரு மாயத்தோட்டம்
ஆயிரம் மான்கள் கூட்டம்....

உண்மையை சொல்பவன்
தீவிரவாதி....

உரைத்ததை சொல்பவன்
தேசத்துரோகி......



பாமரன் ஞானியாகிறான்
பாரத தேசத்திலே.....

தகுதி:
18 வயது
வாக்காளர் அடையாள அட்டை..

நானும்
இன்று பாமரன்
நாளை ஞானி.......


தேவை பட்டால்
என் மீதும் பாயும்..

தே. பா.ச.


- ரஞ்சித்குமார்




Sunday, October 9, 2011

You, you, bloody you…

You made tears trickle down my cheeks
As I try to stop thinking about you
You dominated my thoughts and my head is so heavy
You stopped me from moving out of my home
For the fear of showing my face to some
You made me forget thirst and hunger
You made me feel weak
You made me fall sick
No medicine can take you away from me forever
For I know you would come back for sure
You drove me insane
And you made me write this
You bloody common cold!!!

Wednesday, September 21, 2011

அவளுக்காக...

அவளுக்காக...

கோபம் வந்தால்
கசக்கி தூக்கி எறிகிறாய்,
குப்பைத் தொட்டியில்
காகிதமாய் கண்ணீர்
சிந்திக்கொண்டே...,

பாசம் வந்தால்
குப்பைத் தொட்டியின்
அருகே குடித்தனம்
இருக்கிறாய்,
குழந்தையாக ......

கோபத்தில் முகம் சிவந்தால்
என் மனைவியாகிறாய் ,
ஆசையில் மனம் மகிழ்ந்தால்
என் மழலையாகிறாய்..

உன் கண்ணீர் பட்டால்
நான் நனைந்து போகிறேன்
இல்லை இல்லை
நான் அணைந்து போகிறேன்..

மாறிவிட்டேன் என்கிறாய்
ஆமாம்
உன் பித்தனாக இருந்தேன்
பக்தனாக மாறிவிட்டேன்..

விண்ணின் ஒரு துளி நீர்
ஊற்றெடுக்காது ,
உன் விழியின் ஒரு துளி
பாறை என்னுள்ளே
ஈரம் கசிய செய்கிறது..


ஒருவர் அன்புக்கு மற்றவர்
ஏங்கி அழுகின்றனர் காதலர்கள்,

ஆனால்

அவர்களின் காதலோ???

இன்பத்தில் களியாட்டம்
ஆடிக் கொண்டிருக்கிறது..

தனக்கு அழிவில்லை என்பதை எண்ணி...

-கி.ரஞ்சித்குமார்.

Friday, September 16, 2011

தலைமுறை தாண்டி...



தலைமுறை தாண்டி...

வயது ஐந்துக்கு மேல்,
அப்பா இழுத்துச் சென்றார்
கேட்காமலே கிடைத்தது
மிட்டாய் ,

கண்களில் பயம்
கண்ணீர் ஊற்றுடுக்க
அமர வைத்தார்கள்
பாசமாய் பேசி
தன் பணி முடித்தார்...

அந்த சவரத் தொழிலாளி....

வயது வாலிபம் ஆனது
பேஷன் தெரியாது என
அடுத்தக் கடைக்கு மாறினாலும்,
அந்த நாளின் பாசத்திற்காக
அவ்வபோது முகச் சவரம் மட்டும்...

இன்று என் மகன்
குழந்தையாக...

பேஷன் வேண்டாம்
அன்பான தொழிலாளி வேண்டும்
மீண்டும் என் பால்ய
சவரத் தொழிலாளி......

நாளை??

என் மகனும் இதே தான்

காலங்கள் கடந்தாலும்
தலைமுறை கடந்து
நிற்கிறார் அந்த

சவரத் தொழிலாளி.....

அவர்க்குத் துணையாக..

அந்த உடைந்த நாற்க்காலி....


-ரஞ்சித்குமார்






Friday, August 12, 2011

பித்தனின் வரிகள்

பித்தனின் வரிகள்.....


அன்பின் அணுவே,

ஆசையின் கருவே,

இன்பத்தின் இருப்பிடமே,

ஈருலகம் வெல்லும் வீரமே,

உருக்கையும் கரைப்பாய்,

ஊன்றுகோலாய் நிற்ப்பாய்,

எத்தனையோ விதம் உன்னில்,

ஏற்றோர்க்கு வாழ்வு இனிக்கும்,

ஐயமில்லா நீ இல்லை,

ஒரு உள்ளம் கானது,

ஓர் உலகம் போதாது
,

ஒளடதம் நீயோ? அழுகின்ற மனதிற்கு,



அடி அடியில் அறிவு

சொன்னால் ஆத்திச்சூடி எனலாம்,



சொல்லத்தான் பொருளில்லை

பொருள் தரும் சொல்லில்லை


மனம் மேல் ஆசை வந்தால்

காதல் எனலாம்,

காதல் மேல் காதல் வந்தால்
?



கிணற்றுத் தவளை

என்னுள்ளம் -கிண்ணத்து தேனில்

கிரங்கிய சிற்றெறும்பாய் மாற,


என் நிலை யாரிடம் கூற..?



பாட்டெழுத தெரியாது

பா விருத்தம்
புரியாது



மனம் கண்டு மை கொண்ட

இவ் வரிகளுக்கு மண்ணவர்

தரும் பொருள் யாதோ?



-கி.ரஞ்சித் குமார்

Tuesday, August 9, 2011

பாதையல்ல... பள்ளிக்கூடங்கள்...

À¡¨¾ÂøÄ... ÀûÇ¢ìܼí¸û...
*«¾¢¸¡¨Ä
§Å¸Á¡ö ¿¼ìÌõ ¦À¡¢ÂÅ÷¸û,
§Å¸Á¡ö ¸¼ìÌõ §ÀôÀ÷ ¨ÀÂí¸û...
«Å÷ º¡ôÀ¢ð¼¾¡ø
þÅý º¡ôÀ¢Îžü¸¡¸...

*šɧÁ ܨáö
À¡¨¾§Â ÀÕ쨸¡ö
§À¡¨¾Â¢ø À¡¨¾ ÁÈó¾
ÌÊÁ¸ý¸û...

*¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¸£¨Ã¨Â
ÜÅ¢ Å¢ü¸¢ýÈ¡û...
«ó¾ ¬§Ã¡ì¸¢ÂÁ¢øÄ¡
㾡ðÊ...

*¾¡Á§¾§Á þø¨Ä
«ÁÇ¢Ôõ þø¨Ä
«Ãí§¸Úõ «Ãº¢Âø ÁýÈí¸û
¦¾Õ§Å¡ÃòÐ Ë츨¼...

*²§¾¡ ´Õ ã¨Ä¢ø
¸Ä¡îº¡Ãò¾¢ý «¨¼Â¡ÇÁ¡ö
¬ÚÒûÇ¢ §¸¡Äõ...

*À½ì¸¡Ã ¿¡¼¡¸¢
Ţ𧼡§Á¡?
º¢øÄ¨ÃìÌ ºô¾Á¢Îõ
À¡ø¸¡Ãý...

*¬¾ÅÛõ ŢƢ츢ýÈ¡ý
¯Â÷ ¸ðʼí¸û º¢¡¢ì¸¢ýÈÉ...
*¸Õ¿£Ã µ¨¼Â¢ø
þÕºì¸Ã À¼Ì¸û...
º¢ìÉø Å¢Øó¾Ð...

*Á¡¢Â¡¨¾Â¡¸
«ó¾ ¿¡Ç¢ý Ó¾ø Å¡÷ò¨¾
"³Â¡...?"
´ü¨ÈåÀ¡ö,
"¿£í¸ ¿øÄ¡ þÕ째¡Ûõ º¡Á¢"
Ó¾ø ¬º¢÷Å¡¾õ...

*³ò¾¢§Ä§Â ŨÇóÐÅ¢ð¼¡ø
³õÀÐ ÍÄÀÁ¡õ...
¾ûÇ¡ÊÉ¡û «ó¾
ÀûÇ¢ìܼ º¢ÚÁ¢...

*°¡¢ø ÁîÍ Å£Î
¦ÀÕõ ÀÉ측Ãý
¸¡¨Ä¢ø ¿¢ýÈÀÊ
¿¡‰¼¡ ÓÊò¾¡ý
¿¸Ãõ Åó¾ ¿¡§¼¡Ê¡ö...

*Á¾¢Âõ
º¡¨Ä¢ø §Å¨Ä¢ø¨Ä...
*Á¡¨Ä ¦¿Õí¸¢ÂÐ...
Á¨Æ ÓÊó¾ Á¾¢Âõ §À¡ø
´Õ ÁñÅ¡º¨É...
º¡¨Ä¸û ¬ì¸¢ÃÁ¢ôÒ...

*¨¸§¸¡÷ò¾ ¸¡¾Ä÷¸û
¸¼ü¸¨Ã §¿¡ì¸¢...

*¾¡Â¢ý ÁÊ¢ø
ÀûÇ¢ìܼ º¢È¡÷¸û...
*ţΠ¾¢ÕõÒõ §Å¸ò¾¢ø
º¡¨Ä Å¢¾¢ ÁÈó¾ ÁÉ¢¾÷¸û...

*С¢¾Á¡ö ¦¾¡¼í¸¢ÂÐ
С¢¾ ¯½Å¸õ...

*¸¨Ç¸ðÊÂ
¨¸§Âó¾¢ ÀÅí¸û...

*§Ã¡ð§¼¡Ãì ¸¨¼Â¢ø
¸¡Ä¢Â¡Ìõ ¦¸¡ÍÅò¾¢
ÍÕû¸û...

*þ¼õ ¸¢¨¼ò¾ ¿¢õÁ¾¢Â¢ø
À¢Ç¡ðÀ¡Ã ¦À¡¢ÂÅ÷...

*àì¸õ ¦¾¡¨Äò¾
þÃ×ì ¸¡ÅÄ÷¸û...
*¾¡Á¾ò¾¢üÌ ÁýÉ¢ôÒ
§¸ðÌõ Á¨É¡Çý¸û...

*À¢û¨ÇìÌ ¬Ú¾ø
¦º¡øÖõ ¾¡ö... ±É

Ó¸í¸û ¿Êò¾¡Öõ,
ÁÉí¸û
¾¢Éõ §¾Îõ Å¡ú¨¸Â¢ø
¾¢Éô §À¡Ã¡ð¼í¸û

¦Á¡ò¾ò¾¢ø,

¸¡¨Ä Ó¾ø þÃ× Å¨Ã
¸¼óÐ ¦ºøÖõ
À¡¨¾¸û «øÄ «¨Å
¿õ¨Á ¸ü¸î ¦º¡øÖõ
ÀûÇ¢ìܼí¸û...!

Saturday, June 18, 2011

Vimarsanangal


விமர்சனங்கள் .......!!!!

காதல் என்றாலே
காதை பொத்திக்கொள்ளும்
சமூகத்தில் கடவுளை
அடையும் வழி
அன்பென்று சொல்லாதீர்கள்.........
காதலில் ஒன்றுமே
அது நினைத்ததை
நடத்தி முடிக்கும்,
ஒருவகையில் காதலும்


கடவுளே.... காதல் என்னும் வார்த்தையை

நீங்கள் அனுபவிக்காதவரை
அதன் அர்த்தத்தை
யாரிடமும் கேட்காதீர்கள்...
காரணம்
அடி பட்டவனுக்கே
அதன் வலி தெரியும்
காதலில் புனிதமானது,
மோசமானது, என பல
வகைகள் இருக்கலாம்
அது
ஒரு ஓவியம் பார்ப்பவரின்
பார்வையை பொறுத்து
எண்ணங்கள் மாறுபடும் ....
காதலின் மீது வெறுப்பை
கொடுப்பது தவறான
புரிதலே.....
ஆனால்
காதலின் நண்பன் ,எதிரி
இரண்டும் காமமே........
காமத்தின் ஜன்னல் வழியே
காதலின் வீட்டை எட்டிப் பார்க்காதீர்கள்......
அங்கே நிர்வாணமாய்
இரு உடல்கள் மட்டுமே தெரியும்...
உள்ளத்தின் கண் கொண்டு
காதலைப் பாருங்கள்
உண்மை அன்பின் அர்த்தம் புரியும்.

கடைசியாக
சில வரிகள் காதலுக்காக......
காமமில்லா காதல்
பிரச்சாரம்....
காதலில்லா காமம்
விபச்சாரம்......

Friday, March 25, 2011

இலக்கணம்

இலக்கணம்


காலை துயில் எழுந்து
கலைந்த கூந்தல்தனை
அள்ளிமுடிந்து
கொள்ளையின்
கேணித் தண்ணீர்
வாசல் தெளித்து

அன்னமாய் அரிசி மாவுதனை
கோலமிட்டு அடுக்களை வேலையினை
அடுக்கடுக்காய் அரங்கேற்றி
அந்தி சாயும் வேளையிலும்;
முந்தி இருப்பாள் வேலையிலும்;
இதுவே பெண் என்றும் ,
அவள் இலக்கணம் என்றும்
எண்ணியிருந்தேன்.................!



மாற்றம்.......



கைப்பேசி காதல் இசையில்
கண்விழித்து
தட்டி எழுப்பினாள்(ல்)
பயனில்லை.......




அவன் கைப்பேசிக்கு
ஒரு மிஸ்டு கால்
மின்னலாய் எழுந்தான்
மின்சாரக் கணவன்....

அடைமழையாய் அரங்கேறின
அடுக்களை பணிகள்
அரை நாழியில் ;

காலை எட்டு மணி
மின்சார ரயில்ஏறி
சம்சாரம் சென்றுவிட்டாள்.......




மாலை எட்டு மணி
அதே மின்சார ரயில்
சம்சாரக் குயில்.......

இரவு உணவு
இரண்டு பொட்டலம்,
பிரித்து உண்டார்கள்
சிர்த்து கொண்டே
ஒலித்தது கடிகாரம்
இரவு பதினோரு மணி......



சிக்னலாய் சிரிப்பு
சிக்கனமாய் பார்வை..
கண்களில் உறக்கம்
கனவிலே வாழ்க்கை....




என இலக்கணமும்
இல்லாக் கனவானது ..........???????

Tuesday, March 22, 2011

விண்ணைத் தாண்டி வருவாயா...?

விண்ணைத் தாண்டி வருவாயா....?
அது
ஒரு இரவு.....
நான்
அவளை பார்க்கின்றேன்;
அவளும் என்னை பார்க்கின்றாள்;
அவளையே
உற்றுப் பார்க்கிறேன் வெட்கத்தில் வெண்மேகத்தில் முகம் புதைத்தாள் என் உயிர் சிதைத்தாள்........
அவள் தேகம் எனக்கு புலப்படவில்லை பால் ஓடையாம் பளிங்கு முகம் மட்டுமே பார்வைக்கு அனுமதித்தாள்.....
எங்களுக்குள் மௌனம் மட்டுமே மொழியாய் இருந்த்தது;
பாதைகள் மறக்கும் அடர் காடுகளில் நடந்தாலும் என் பாதச் சுவடில் பின் தொடர்ந்தாள்..
கால்கள் திசை அறியாது நடந்தன,
அவள் பார்வை என்னை விடவில்லை ஓடி ஓடைக் கரையில் ஒளிந்தேன் சல சல என சிதைந்து கொண்டே சிரித்தாள் நீரில் ..........
கண்களை மூடினால் இமைகளில் இருப்பிடம் கொண்டு விழிதனை விட மறுக்கிறாள், கோபத்தில் செல்லமாய் முறைத்தேன் வேகமாய் மூடினாள் முகத்தை மேகத்துணியால்.......
போதும்.... போதும்....
மூச்சுவிடத் துடிக்கிறேன் மூர்ச்சையாகி விடுவேனோ...?
நிறுத்தி விடு உன் விழியின் விளையாட்டுக்களை,
அன்பாய் அழைக்கிறேன் அருகில் வருவாயா..?
இல்லை எனக்கு நிம்மதியே இறங்கி வருவாய் வெண்மதியே....
என்னைத் தூண்டி விட்டாயே..! நிலவே நீ விண்ணை தாண்டி வருவாயே...!
-கி. ரஞ்சித் குமார்

Thursday, March 17, 2011

Avalukkul Eeram...

அவளுக்குள் ஈரம்…….
பசுமைக்கூட்டமாம் என் இளமைத்தோட்டத்தில்
மோகப் புட்களும் முளைக்க,
தாகக் கொடியில்
காதல் மலர்களும் பூக்க:
அவள் கூந்தல்
கொடியில் சூடச்சொன்னேன்
என் காதல்மலரை
பொசுக்கி விட்டுச்சென்றாள்
அக்னிப் பார்வையில்;
பாலையாய் மாறினேன்:
ஏழையாய் ஏங்கினேன்:
அன்பு மழைக்காக
ஆண்டுகள் சில………
பருவநிலை மாற்றம்
அவள் பார்வையில் ஏற்றம்….?
பாறையா..?எனக் கேட்ட
அவள் உள்ளத்தில் சிறை வைத்து;
ஏனோ
காதல் ஊற்றும் கசிந்தது
அவளுக்குள் ஓரமாக……….

கல்லுக்குள் ஈரமாக…..
கி.ரஞ்சித் குமார்

Kaettu Chollungal.!!

கேட்டுச் சொல்லுங்கள்.!!
போர் நடக்கவிட்டுவிட்டு
நிவாரணம் தருவதை விட
போரை தடுக்க முடியாதா……….?
“பிளாஸ்டிக் வேண்டாம்” என
பிளாஸ்டிக் பலகையில்
விளம்பரம்……………?
அன்பே கடவுள்..என சொல்லும் எல்லா
மதங்களிலும் அது எங்கே உள்ளது..?
என கேட்டுச்சொல்லுங்கள்…..
குளத்தை மூடி கட்டப்பட்ட
உயர் கட்டிடத்தில்…..
மழைநீர் உயிர்நீர் வாசகப் பலகை…….?
“தமிழ் வாழ்க”
மின்னொளிப் பலகைக்கும்
மின் வெட்டு…..?
பல் விழுந்த்த கிழவி
ஆனாள்……மினுக்கும்
பொன்மேனிக் குமரியாக….
தேர்தல் நேரத்து சாலைகள்……

Monday, March 14, 2011

Pichchaiyedungal !



பிச்சையெடுங்கள்….


உங்கள் முகம் வேண்டாம் எனக்கு
மனதை பிச்சையிடுங்கள்…..
மண்டியிட்டு கேட்கிறேன்…..
மனதில் பணக்கட்டுகளாய் மகிழ்ச்சி
இல்லாவிட்டாலும் சிரிப்புச்
சில்லரைகளையாவது சிலருக்கு
பிச்சையிடுங்கள்…!
திருவோட்டில் ஒற்றை நாணயம் போல்
இருந்தாலும் சரி உண்மையான ஒரு
உறவையாவது உலகிற்க்கு
பிச்சையிடுங்கள்…….!
உங்கள் மனதைநோக்கி
கேட்கிறேன்;
கன்னியமான அன்பை
பிச்சைதாருங்கள்..
என் கல்லறையில்
பதித்து வைக்க…….!
காலத்தின் ஓட்டத்தில் உங்களுக்கு யாரும்
உறவுப் பிச்சையிடமாட்டார்கள்,
உயிரில்லாமல் வாழ்ந்தாலும்
உறவில்லாமல் வாழமுடியாது……!
ஓடி பிச்சையெடுங்கள்;
ஓயாமல் பிச்சையெடுங்கள்;
உண்மையான உறவுகளைத்
தேடி காலமெல்லாம்
பிச்சைக்காரர்களாய் இருப்போம்…
தவறில்லை…………!
கி ரஞ்சித் குமார்

Friday, March 11, 2011

Kalloorith Thaaikku Oru Kaditham


கல்லூரித் தாய்க்கு ஒரு கடிதம்

அன்புத் தாய்க்கு………………..
இது போர்க்களத்தில் தோட்டாக்களின் அடை மழையில் கந்தகத் தென்றலிலும் கண்களில் சிரிக்கும் தன் தாய்க்கு மகன் எழுதும் கடிதம் அல்ல. ஆனாலும் நான்கு ஆண்டுகளில் நான்கு யுகங்கள் வாழ்ந்துவிட்ட வகுப்பறையாம் கருவறையில் எங்களை மீண்டும் இவ்வுலகிற்க்கு பிரசிவித்து பிரகாசிக்க வைக்கும் கல்லூரித் தாய்க்கு ஒரு பச்சிளம் குழந்தையின் பிரிவுக் கடிதம்…………..
தாயை பற்றி அவன் வளரும்போது கேட்பதை விட அவன் வளர்ந்த பின் கேட்டால் காகிதங்கள் கூட பாசத்தின் ஊற்றெடுக்கும்,அது போல் தான் எங்கள் கல்லூரி வாழ்வும்.முடிவுபெற போகிறது என்று என்று நினைவு வரும்போதெல்லாம் கால்கள் யாருமில்லா தனிமையில் ஓட, கண்கள் கருமேகமாய் மூட, மின்னலாய் தோன்றி மறைகிறது எங்கள் நினைவுகள்……..
முதல் நாள் வாயில் படி மிதிக்கும் போது பெற்றோர் ,ஆசிரியர்,நண்பர்கள் என அனைவரும் சிந்தையில் சிரிப்பார்கள் ஆனால் அடுத்த கணமே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய மந்தையின் சிறு ஆடாய் கண்கள் பிதுங்க, வாழ்வின் மீது ஒரு பயம். ஆனால் எங்களை வாரி அணைத்து புதியதொரு உலகத்தை படைத்தவள் நீ.
பிள்ளையின் தவறுகளை சில நேரம் பெற்ற தாய் கூட பொறுப்பதில்லை,ஆனால் நாங்கள் செய்வது எந்த தவறானாலும் அதை ஏற்று புன்முறுவல் பூக்கும் உன் முகத்தை நான் அறிவேன்.வெறும் கட்டிடம் தானே என ஏளனம் செய்பவர்கள் யாராயினும், தனிமையில் ஒரு நாள் இல்லை மனக்கவலையில் ஒரு நாள் எப்போதவது நின்றிருந்த போது கைகள் தானாய் தூண்களை நோக்கி துணை தேட, வார்த்தைகளும் கூடவே தனிமையில் நடந்த்திருக்கும்…..
எத்தனை எத்தனை இன்பங்கள்?, பல பொழுதுகளை களவாடிய காதல்கள், அன்பில் மறைந்த சோகங்கள், வினையான விளையாட்டுக்கள் மொத்தத்தில் கோடிகள் கொடுத்தாலும் விலை போகாத ஒரு அன்பு நிலம் தாயே உன் உள்ளம்…….
தேர்ச்சி பெற்றதால் எதிரியான நண்பர்கள், தோல்வியடைந்த்ததால் நண்பர்களான எதிரிகள். என வாழ்வின் தத்துவங்கள் ஆறு மாதத்தில் உன் மடியில்………
நாளொரு நண்பர்கள்,பொழுதொரு காதலிகள், கண்களால் பேசும் காதலிகள், பெற்ற குழந்தைகளை பிரிந்து தினம் எங்களை குழந்தைகளாய் ஏற்ற ஆசிரியர்கள், என கூட்டு குடும்பமாய் எங்களை வளர்த்தவள் நீ, மொத்தத்தில் எத்தனையோ தவறுகள் செய்தாலும் சிறு மழலைகள் தானே என பொறுத்து அமைதி கொள்ளும் பல உள்ளங்கள். ஊற்றெடுத்த அன்பு பிரவாகமே உன்னை பிரியும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை எண்ணும் போது கணக்கும் இதயத்தை ஆறுதல் செய்ய வார்த்தை தேடுகிறேன் அகராதியில்.
நாங்கள் செய்த தவறுகள்,குறும்புகள், பெற்ற வெற்றிகள், தோல்விகள் என அனைத்திலும் பங்கு கொண்ட தாயே உன்னை பிரிவதில் வருத்தம் தான் எனக்கு ஆனால் என்னை உலகம் அறிய வைத்த உன்னை இவ்வுலகம் அறிய வைப்பேன் கலங்காதே…… என் கண்களும் கலங்குகின்றன………..
உன் மகன்….
கி.ரஞ்சித் குமார்.

Thursday, March 10, 2011

Uthiraatha Pookkal


உதிராத பூக்கள்.
உணர்வில் விதை விதைத்து;
உயிரில் வேர் கொடுத்து;
அன்பின் அருவியில்
வளரும் செடிகளாம்
இரு உள்ளங்களில்
பூக்கும் நட்பு மலர்கள்,
பிரிவுத் தென்றலில் கூட தப்பிவிடும்.
ஆனால்
சில நேரம் அவை
சூழ்நிலை சூறாவளியில்
சுழற்றி எரியும் காகிதங்கள்;
சூடுபட்டு
வீடு திரும்பும் பூனைகள்;
ஆனால் நம் நினைவுத் தோட்டத்தில்
இவை
என்றுமே உதிராத பூக்கள்.
- கி.ரஞ்சித்குமார்

Saturday, February 5, 2011

சுயசரிதை !

சுயசரிதை !

தினம் ஒரு பாட்டு
தினம் ஒரு மெட்டு
தலையசைத்தேன் !



தினம் ஒரு மேடை
தினம் ஒரு வேடம்
கதை படித்தேன் !



தினம் ஒரு தோட்டம்
தினம் ஒரு ரோஜா
சரம் தொடுத்தேன் !



தினம் ஒரு கோப்பை
தினம் ஒரு பானம்
இதழ் விரித்தேன் !


தினம் ஒரு படுக்கை
தினம் ஒரு பதுமை
இடம் கொடுத்தேன் !


தினம் ஒரு படகு
தினம் ஒரு பயணம்
திசை மறந்தேன் !


இறுதியில்

ளமை இழந்தேன்
இச்சைகள் துறந்தேன்
ஞானி ஆனேன் !



நாடு கண்டேன்
நடந்ததைச் சொன்னேன்
கடவுள் ஆனேன் !

Monday, December 20, 2010

கலிலீயோவின் கவலை!

கலிலீயோவின் கவலை!

ல்லை! இல்லை!
எதுவும் உண்மை இல்லை!

சூரியனும் மையம் இல்லை.
பூமிகூட அதனை சுற்றவில்லை.

அறிவியல் என்று எதுவும் இல்லை.
அவனின்றி ஓர் அணுவும் இல்லை.

விண்ணும் மண்ணும் சொந்தம் இல்லை.
விவிலியம் தவிர வேறு உண்மை இல்லை.

புதிய அறிவில் புண்ணியம் இல்லை.
'போப்' அறியாதது ஒன்றும் இல்லை.

'சாம்' சொன்னதில் குற்றம் இல்லை.
சத்தியமாக உலகம் சுழலவில்லை.

(இறுதியில்)

மண்டியிட்டால் தண்டனை இல்லை.
மன்னிப்பு கேட்டதால் மரணமும் இல்லை.

இல்லை! இல்லை!
எதுவும் உண்மை இல்லை!

மனிதனுக்கும் ஆறாம் அறிவு
அவசியம் இல்லை!


குறிப்பு:  1633 AD.
கலிலீயோவின் ' உலகம் நிலையானது அல்ல. சூரியன் உலகத்தை சுற்றவில்லை. உலகம்தான் சூரியனை சுற்றுகிறது.' என்ற கருத்துகள் விவிலியத்தில் 'சாம்' (Psalm) சொன்ன கூற்றிற்கு மாறான கருத்து என்றும், ஈபுரூவின் விவிளியமான 'எக்லேசியெடஸ்'ற்கும் (Ecclesiastes) மாறான கருத்து என்றும், அது கிருஸ்துவ மதத்தை அவமதிக்கும் செயல் என்றும் வாடிகன் கருதி  கலிலீயோவை வாடிகன் தேவாலயத்தில் மண்டியிட்டு, தான் கூறியது அனைத்தும் சான்றுகள் அற்றவை என்றும், உண்மைக்கு மாறானவை என்றும் கூறி மன்னிப்பு கேட்க்கச் செய்தது.

 

Psalm 104:5 - 'He set the earth on its foundations;
   it can never be moved.'