Showing posts with label Karthika Rajendran. Show all posts
Showing posts with label Karthika Rajendran. Show all posts

Sunday, June 16, 2013

அவள்... அவன்...

                                                    அவள்... அவன்...

சில்லென்ற தென்றலும், பனிக்கட்டியை  உருக்கி தெளித்தது போன்ற பிரமையை ஏற்படுத்திய நவம்பர் மாத மழைச்சாரலும், நடுஇரவு நிசப்தமும், அதனை கலைக்கும் விதமாக சற்றே அதிர்ந்து கொண்டிருந்த புதுப்பாடல் மெட்டுக்களையும் ரசித்தவாறு 'அவன் மனம் விரும்பும் அவளும்' அருகிலிருக்க, அரை மணிநேர பயணம் அரை விநாடியாக கரைந்தோடியது  அஷ்வினிற்கு.  நடுஇரவைத் தாண்டி அதிகாலையை எதிர்நோக்கிய ரம்மியமான சூழலை அவளும்  ரசித்தாள். இருந்தும் ரசனையை மீறிய எதிர்பார்ப்பு உள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்ததனால்  பெரிதாக எந்தவொரு தாக்கத்தையும் இந்த சூழல் அவளிடம் ஏற்படுத்தவில்லை. அஷ்வினிற்கு அவளின் அமைதி புதிதாக, புரியாத புதிராக இருந்தது.

ஏர்போர்ட்டினுள் நுழைந்ததும்  சட்டென்று நின்றது கார். தற்காலிகமாக நினைவளைகளுடனான  சண்டையை நிறுத்தி தன்னிலை உணரவைத்தது அஷ்வினுடைய அன்பான ஸ்பரிசம். சுற்றி பார்வையை செலுத்தியவள் தனக்காக காரின் கதவை அஷ்வின்  திறந்ததையறிந்து தட்டுத்தடுமாறி  கீழே இறங்கியதும்,  தானும் கீழிறங்கி புன்னகையுடன்  ஓரிரு வார்த்தைகள்  கூறி கையசைத்து அவள் உள்ளே போகும்வரை காத்திருந்து அனுப்பிவிட்டு, கைகடிகரத்தில் மணி 1:30 என பார்த்தவனுக்கு இன்னும் சரியாக ஒரு மணி நேரத்திற்குள் மற்றவர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்னும் ஞாபகம் வரவே பிரிய மனமில்லாமல் தன்னுடைய காரில் விரைந்தான் அஷ்வின் .

வெளி உலகின் இரவு சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டு ஒளி வெள்ளத்தால் பகலைப்போல காட்சியளித்த ஏர்போர்ட்டின் உட்பகுதி மிகுந்த பரபரப்போடு இயங்கிக்கொண்டிருந்தது. அந்த பரபரப்பை மிஞ்சும் குதூகலத்தோடு தேடல் படலத்தை மேற்கொண்ட அவளது பார்வை நிலைகொண்டது தொலைவில் பயணியர்  இருக்கையில் அமர்ந்திருந்தவனின் மீது. அவளின் மனதில் சட்டென்று  ஊடுருவிய நிகரில்லா மகிழ்ச்சியானது இதழ்களில் சிரிப்பாக வெளிப்பட்டது . மெதுவாக அவனருகில் சென்றவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். கண்களை மூடி 'ஐ- பாட்' டில் இசையை ரசித்துக்கொண்டிருந்தவாறு அவளுக்காக காத்திருந்தவனின் உள்ளுணர்வு அவளது வருகையை அறிவுறித்தியதோ என்னவோ! நொடியில்  கண்களை திறந்தவன் நேராக அவளது விழிகளை நோக்கினான்.

அவள் - சாஹித்யா. அவன் - சித்தார்த்.

ஆச்சரியத்தில்  "ஹாய் சாஹி..." வார்த்தைகள் வெளிவருவதற்குள், குறும்பு புன்னகையுடன் அவனது கைகளை குலுக்கி, அவனுக்காக வாங்கி வந்திருந்த ஸ்வீட்(டை) சர்ப்ரைஸாக உள்ளங்கையில் திணித்து  "ஹாய் சித்தார்த்! எப்படி இருக்க? எப்ப வந்த? அம்மா அப்பா எப்படி இருக்காங்க? ஏதாவது சாப்பிடுறியா?  ஹவ் அபௌட் எ காஃபி?" பதிலுக்காக காத்திருக்காது கேள்விகளை அடுக்கியவளை போதும் போதும் என்று கையுயர்த்தி செய்கையால் நிறுத்தியவன்  "ஒரு ப்லசன்ட் ஷாக் ஆக்சுவலி!  ஐம் பைன்! மாம் அண்ட் டாட் ஆல்சோ பைன் அஸ் வெல்" மெதுவாக யோசித்து பதிலளித்தான் எனினும் அவளது விழிகளின் மீது உறைந்திருந்த தன் பார்வையை அகற்றவில்லை.

அவனது கண் சிமிட்டாத பார்வையின் அர்த்தம் புரியாமல், ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி கேள்விகணை  தொடுத்தவளுக்கு "சாஹித்யா தேங்க்ஸ் பார் டெம்ப்டேஷன் சாக்லேட்! நீ இன்னும் மாறவே இல்ல! அதே மூச்சு விடாம பேச்சு, அதே பளீச் புன்னகை, அதோடு  நம்ம டீல் - எப்ப மீட் பண்ணாலும் அது டெம்ப்டேஷன் சாக்லேட்டோட தான் என்பதை நீ மறக்கல. பாரு நான் மறந்துட்டேன்" வருந்தியவனிற்கு டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்துவிட்டு  "சித்தார்த், நீ கூட தான் இன்னும் மாறவே இல்ல!" ஒரு சின்ன பாஸ் விட்டு தொடர்ந்தாள்  .

"அதே பெர்சனாளிட்டி, அதே நிதானமான இங்கிலிஷ் அக்சென்ட் பேச்சு, அதே ஹேர் ஸ்டைல், அதே மறதி அண்ட் அதே பார்மல் டிரஸ்ஸிங். ஆனா... இப்போ இன்டர்வியு அட்டென்ட் பண்ணபோகல, அட  பொண்ணு பாக்க போவதற்குகூட பிளான் எதுவும் இல்லையே! அப்படியிருக்க  டிராவலிங்லயும் இந்த ஷு சாக்ஸோட ஃ பார்மல் டிரஸ்ஸிங் கொஞ்சம் இல்ல சித்தார்த ரொம்பவே ஓவர் தெரியுமா? பரவாயில்லை, நீ இந்த அவுட்ஃ பிட்ல ரொம்ப இல்லைனாலும்  ஓரளவிற்கு ஹேன்ட்சம்மா  தெரியிரதால நான் உன்ன மன்னிச்சு விடுறேன்."  என்ற சாஹியின் கிண்டலான பதிலுக்கு இருவரும் தங்களை மறந்ததோடு மற்றவர்களையும் மறந்து சத்தமாக சிரித்தனர்.

 "அவ்ளோதானா? வேறெதுவும் இல்லையா?? என்ன பத்தின காம்ப்ளிமண்ட்ஸ் ஏதாவது???" என இந்த முறை அவளின் கேள்விகணை முடியாமல் தொக்கி நின்றதன் அர்த்தம் அவ்வளவு சீக்கிரத்தில் புரியவில்லை சித்தார்த்திற்கு. "வேறென்ன?" என்றவனுக்கு "அதுசரி. இப்படி இருந்தால் தானே நீ சித்தார்த்!" என்று மனதில் திட்டியதை கஷ்டப்பட்டு மறைத்து "சாஹித்யா..... புடவை உனக்கு ரொம்ப நல்லா இருக்கு! நீ அழகா இருக்க! இப்படி சின்னதா ஒரு பொய் கூட சொல்லத்தோனலையா" சட்டென்று முடித்தாள். "வாவ்! ஃ பர்ஸ்ட் டைம் ஐம் சீயிங் யூ இன் சாரீ. யூ லுக் ப்ரிட்டி கார்ஜியஸ் சாஹி!!! ஐம் டேம் சீரியஸ் நவ்!" என்றான் சித்து. அவனது கூற்று உண்மையா அல்லது சாஹி சொன்னது போல் சிறியதொரு பொய்யா? இது 100% நிஜமான உண்மையே! நிஜமும் உண்மையும் ரெண்டும் ஒண்ணுதானே என்கிறீர்களா?!? எது  எப்படியோ அதை சித்துவிடமிருந்து வெளிக்கொணர  படாதபாடு பட்ட சாஹித்யாவிற்கு அழுத்தமான அங்கீகாரம் தரவேண்டியே இப்படி.

 சித்து  "சாரீ கட்டும் போதுதான் பொண்ணுங்க பொண்ணுங்களாக தெரியுறாங்க" என்று அடிக்கடி சாஹியிடம் கூறுவான். சாஹிக்கு சாரீ அவ்வளவு கம்போர்டபுள் இல்லைனாலும் இன்று ஒருநாள் சிட்துவிற்காக ட்ரை பண்ணினாள். அதோட அவுட்கம்  ரொம்பவே பாசிட்டிவ்வாக இருந்ததில் மகிழ்ச்சி. உண்மையில் காம்ப்ளிமண்ட்ஸ் எதுவாயினும் போட்டு உடைகிற மாதிரி சொல்லி விடுவதே சித்து ஸ்டைல்.  இப்பவும் அப்படித்தான்! கண் இமைக்காமல் அவளின் விழிகளையே நோக்கி இருந்ததற்கு காரணம் இதுவே. ஏதோ ஒரு வித்தியாசம் தெரிந்தபோதும்  இதுதானென்று தெளிவாக புரிபடவில்லை. என்ன செய்வது கடைசியில் போட்டு வாங்க வேண்டியதாயிற்று.

 இவ்வாறு சகஜமாக  இருவரும் பேசிக்கொள்வதை பார்கையில் என்ன தோன்றுகிறது? சாஹி-சித்து ரொம்ப நாள் பழக்கமாக இருக்கும் என்று தானே? கரெக்ட்தான் ! பாயிண்ட்டுக்கு வந்தாச்சு. இனி தொடர்வோம்.

 நடக்க ஆரம்பித்ததிலிருந்து இல்லைனாலும், படிக்க ஆரம்பித்ததிலிருந்து ரெண்டு பேரும் ஒன்னா இருக்காங்க. ஆமா... யெஸ்... அ..னா... ஆ..வன்னா... கற்க துவங்கிய காலத்திலிருந்து தான். எப்படின்னா...? அவங்க பெயர்  தான் முக்கியமான காரணம். தெரிந்தோ தெரியாமலோ அவர்களின் பெற்றோர்களுக்கும் இதில் பங்கு உண்டு. ஒரே ஸ்கூல்...ஒரே க்லாஸ். இருவரின் பேரையும் சொல்லிப்பார்த்தால் - சா...ஹி...த்...யா! சி...த்...தா...ர்...த்! அதனால roll no.,reg no.,serial no.,alphabetical order என எந்த ஆர்டர்லயும் சாஹித்யா ஃபர்ஸ்ட் அண்ட் சித்தார்த் பாலோஸ் நெக்ஸட்!


ஸோ, அந்த காலத்து நட்பு.  இது நாள் வரையிலும் நட்புக்கு இலக்கணம், இலக்கியம், செய்யுள், கட்டுரை, முன்னுரை, முடிவுரை என முற்றுப்புள்ளி இல்லாமல் நீழும் அனைத்து முன்னுதாரணஙளாகவும் திகழ்கின்றனர் என்பதெல்லாம் இக்காலத்தில் வேலைக்கு ஆகாத ஒப்பீடுகள். 

 பலமான அதே சமயம் இவர்களின் நட்பிற்கு பாலமாக இருப்பது 'அண்டர்ஸ்டான்டிங்' மட்டுமே. ஒருவரை பற்றி மற்றொருவர் ஆழமாக புரிந்து வைத்திருந்தனர். ஆதலால்  பெரும்பாலும் இவர்களுக்குள் சண்டை வராது. அப்படியே தப்பித்தவறி வந்துவிட்டால்? இன்று சண்டை நாளை சமாதானம் என்ற பேச்செல்லாம் செல்லாது, குறைந்தது ஒரு வாரத்திற்காவது பேச்சு வார்த்தை இருக்காது. யார் பக்கம் தவறோ அதை உணர்ந்து 'சாரி' சொன்ன பின்னர் தான் சமாதான உடன்படிக்கை.

இதென்னவோ 'ஈகோ' ப்ராளம் மாதிரி தோன்றுதே என்றால் முற்றிலும் தவறான யூகம்.  நட்பிற்குள் 'சாரி & தேங்க்ஸ்' தேவையில்லை என்பதை மாற்றி தாரளமாக 'சாரியும் தேங்க்ஸ்யும்' பரிமாறிக்கொள்ளப்பட்டது இருவருக்குமிடையில். பரிமாறிக்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஜாலியான விஷயம் 'விஷ்ஷஸ்' அதாவது வாழ்த்துக்கள். பெர்த் டே , ஃப்ரண்ட்ஷிப் டே ல ஆரம்பிச்சு மதர்'ஸ் டே, பாதர்ஸ் டே கடந்து வுமென்'ஸ் டே, மென்'ஸ் டே தாண்டி எர்த் டே, வாட்டர் டே என ஏறக்குறைய 365 நாளும் ஒரு காரணம் கண்டுபிடிச்சு விஷ் பண்றது இருவருக்கும் இஷ்டமான ஒன்று. இதெல்லாம் ஜெனரல் நாலேஜ் அப்டேஷன்காகவும் தான் பாஸ்!

ஸ்பெஷல் அக்கேஷன்ல பெர்த்  டே அல்லது பெஸ்டிவல் நாட்கள்ல   சர்ப்ரைஸ் கிப்ட், ட்ரீட் எல்லாம் பழைய ஸ்டைல். அடுத்த நாள் அல்லது சிறிது  நாள் கழித்து, எது அப்போதைய தேவையோ அல்லது அவங்களோட ஆசைப்படி ரொம்ப நாள் வாங்கணும்னு நினைத்த ஒரு பொருளை ப்ரெசண்ட் பண்றது இவங்களோட ட்ரென்ட்!

 இப்படியெல்லாம் இருந்தாலும் வீடு, காலேஜ், லைப்ரரி தவிர வேறெங்கும் இருவரையும் ஒன்றாக காண முடியாது. "ஒரே மூஞ்சிய எவ்வளவு நேரம் தான் பார்ப்பது? போர் அடிக்காதா??" என்ற விளக்கம் இதன் பின்னணியில் இருவர் தரப்பிலும். நிஜத்தில் இருவரும் சுதந்திரமாக  தங்களது 'கமிட்மென்ட்ஸ்'க்கு நேரம் ஒதுக்கி செயலாற்றினார்.  

ஆரம்பம் முதல் ஒன்றாகவே இருப்பதாலோ என்னவோ இருவரின் 'மைன்ட் செட்டும் தின்க்கிங்கும்' தராசில் வைத்து நிறுத்தது போல எப்பவும் ஒருசேரத் தான் இருக்கும்.  ஸ்கூல் முடிச்சு காலேஜ். காலேஜ்ல யு.ஜி சாய்ஸ் ஒரே டிபார்ட்மென்ட், முடிச்சதும் எம்.பி.ஏ க்கு அப்ளிகேசன் என எல்லாம் சொல்லிவைத்ததை போல் ஒன்றாகவே நிகழ்ந்தது. சதியா இல்லை விதியா என்று தெரியவில்லை சாஹியின் எம்.பி.ஏ கனவு தொடரவில்லை. அவள் வேறு துறையில் மேற்படிப்பை தொடர்ந்தாள். சித்துவிற்கு மட்டுமே எம்.பி.ஏ சாத்தியப்பட்டது. இப்பொழுது இரண்டு வருட படிப்பும், பிரிவும்  உருண்டோடி படிப்பிற்கு முற்றுப்புள்ளியும் வைத்தாயிற்று.

இத்தனை இருந்தாலும் இருவருக்கும் ஒத்துப்போகாத குணநலன்கள் எண்ணிலடங்காதவை.ரெண்டு பேரும் இரு வேறு துருவங்கள். opposite pole attracts என்பதனால் தான் என்னவோ ஒட்டிக்கிட்டாங்க.

சித்து மாடர்ன் பையன் - சாஹி ட்ரடிஷனல் பொண்ணு.சித்து ரொம்பவெ  பிராக்டிகல் - சாஹி ரொம்பவே சோசியல். சித்து ஒரு 'ஓபென் புக்' - சாஹி             'ஸெல்ப் சென்ட்ர்ட்'.  ' பேஷன் அண்ட் இண்ட்ரெஸ்ட்' க்கு நீண்ட லிஸ்ட் இருக்கும் சித்துவுக்கு - சாஹி ஆல்மோஸ்ட் செய்வது எல்லாமே பிடித்திருந்தால் மட்டுமே, பலவற்றையும் பிடித்ததாக மாற்றிக்கொள்வாள். சித்து 'ஷார்ட் டெம்பர்ட்' - சாஹி பொறுமையின் மறு உருவம். சித்து 'ஜஸ்ட் லைக் தட்' னு வாழ்க்கையை என்ஜாய் பண்றான் - சாஹி வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று 'ஸ்டான்டர்ட்'ஆ  பிக்ஸ் ஆயிட்டாள்.  சித்து விற்கு ப்ரெண்ட்ஸ் கேங் உண்டு, ஆனால் 'ரிலேஷன்சிப்' ல அவ்வளவா நம்பிக்கை இல்லை - சாஹிக்கு ப்ரெண்ட்ஸ் தான் எல்லாமே. அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக, நட்போடு இது வரை வந்ததற்கு காரணமாக அமைந்ததும் இந்த கடைசி கருத்தாகவே இருக்கவேண்டும் .

சாஹிக்கு சித்து பத்தின எல்லாமே அத்துப்பிடி. சித்துவிற்கு சாஹி தன் குடும்பத்தில் ஒருத்தி போல. அப்படிஇருக்க இருவரின் கருத்துப்படி "லவ் இஸ் நாட் எ ஃபாண்டஸி ஆர் சம்திங்க் டு பி ஃபாஸினேடெட்"  என்பதால் அவர்களுக்குள் மன சஞ்சலமின்றி ஒருமித்து பயணிக்க முடிந்தது. அதில் இப்பொழுது என்ன நேர்ந்துவிட்டது என்பது தானே கிளைமாக்ஸ்.

சித்து எம்.பி.ஏ முடித்து கனடாவிற்கு செல்கிறான் பணியில் சேர. ஒரு மணிநேரம் அவர்களுக்கு போதவில்லை இரண்டு வருட கதை பேசிமுடிக்க.
மணி 2:30 ஆகிவிட்டது. சரியாக 3:30 க்கு சித்து விற்கு ப்ளைட். அஷ்வின் திரும்பி வந்தாயிற்று சாஹியின் அம்மா, அப்பா மற்றும் சாஹி-சித்துவின் நண்பர்களோடு.

சாஹிக்காக சித்து வலை வீசி தேடிப்பிடித்த மாப்பிள்ளைதான் அஷ்வின். அவளுக்கு பிடித்தவாறு இருக்க வேண்டுமென்று சித்து மிகவும் சிரத்தை எடுத்து கண்டுபிடித்திருந்தான், தங்கள்  இருவருக்கும் பிடித்ததை விட்டுக்கொடுக்கப் போகிறோம் என்ற நிலையறியாமலேயே. சாஹிக்கும் அஷ்வினை பிடித்திருந்தது - அவன் சித்துவின் செலெக்க்ஷன் ஆயிற்றே!

சாஹி-சித்து என்பதே இத்தனை காலமும் இவர்களுடைய ஜெபமந்திரமாக இருந்தது, ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைபார்களே தவிர போடா-போடி என்று ஒருபோதும் அழைத்ததில்லை. காரணம் தங்களுக்கு வரப்போகும் ஒருவனை/ஒருத்தியை மட்டுமே செல்லமாக அவ்வாறு அதட்டுவது என்று தங்களுக்குள் முடிவெடுத்திருந்தனர்.

புறப்பட வேண்டிய நேரமாயிற்று. சித்து அனைவரிடமும் விடைபெற்று போர்டிங்காக உள்ளே செல்ல ஆயத்தமானான். அவனையும் அறியாமல் "சாஹி ஐ மிஸ் யூ டீ!" என கை குலுக்கிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று மறைந்தான். அதன் அர்த்தம் புரிந்து திடுக்கிட்டவளாய் " ஐ மிஸ் யூ டூ டா சித்து!"  என்று பதிலுக்கு அவனிடம்  சொல்லமுடியாததனால் கண்களில் இருந்து வழிந்த ஒரு துளி கண்ணீர் கன்னத்தை நனைத்தது.

ஒருவரை மற்றொருவர் நன்றாக புரிந்து கொண்டதால் என்ன பயன்? தங்களை தாமே  இருவரும் புரிந்து கொள்ள இத்தனை வருடங்கள் ஆனது. ஆனால் பிரியும் தருவாயில்  நொடிப்பொழுதில்  தன்  உள்ளத்தில் மறைந்திருந்த அன்பை சொல்லாமல் சொல்லிய கண்ணீரை துடைக்க மனமில்லாமல் சித்துவையே  பார்த்தபடி  சிலையாக நின்றிருந்தாள் அவனை மறுபடி பார்க்கப்போகும் நாளை எதிர்நோக்கியவளாய்.

!!!---!!!
 

Saturday, February 9, 2013

ஐந்தறிவா? ஆறறிவா?

ஐந்தறிவா? ஆறறிவா?

       நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிசய நிகழ்வுகளின் பட்டியலில் இது மிக முக்கியமான ஒன்று - ரெனோ அமைதியாக அமர்ந்திருந்தது. ஏய் நாயே! அமைதியாக இரு என கேட்கும் அதட்டலுக்கும் அதற்கு பதிலாக ரெனோவிற்கு வரும் கோபத்திற்கும்  தற்சமயம்  வேலை இல்லை.

     தன் வீடு மட்டுமல்லாமல் எதிர் வீடு, பக்கத்து வீடு, தெரு முனையிலிருக்கும் வீடு என அந்த தெரு முழுவதற்கும்  ஒரே செல்லப்பிள்ளை என்ற அகந்தை சற்று அதிகமாகவே இருந்தாலும் தெருவையே ரெனோ கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்ததென்னவோ ஏற்றுகொண்டாகவேண்டிய நிதர்சனமான உண்மை.  தன் அனுமதி இல்லாமல் யாரும் எந்த வீட்டிற்குள்ளும் நுழையவோ, சொல்லிக்கொள்ளாமல் வெளியேறவோ முடியாது. அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்.

             பெருமைகள் பலவற்றிற்கு புகலிடமாக இருக்கும் ரெனோவிற்கு  சில பல பிடிக்காத விஷயங்களும் இருந்தது. அவை பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பு :

1. தண்ணீர் - 'ஆல் டைம் அலர்ஜி! '. மழை அறவே ஆகாது. குடிப்பதற்கு கூட தண்ணீர் தொடுவது சந்தேகமே. புரியுது உங்களின் புருவம் உயருவதற்கான காரணம் 'அப்போ குளியல்?!?' அதுதானே? அது தண்ணீர் சேமிக்கும் முயற்சி. ரெண்டு மூனு  மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே. அதுவும் சாதாரணமாக அல்ல ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருக்கும். இல்லையெனில் தீபாவளி பொங்கல் என வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் டபுள் ஓ.கே. குஷியோ குஷி தான்.

2. சத்தம் - 'ஷ்ஷ்ஷ்... மெயின்டயின் பின் ட்ராப் சைலன்ஸ்'. யாராக இருந்தாலும் அனாவசியமாக பேசுவதோ, சிரிப்பதோ, சண்டையிடுவதோ கூடவே கூடாது. ஆனால் 24 மணி நேரமும் 'ஆன் ட்யூட்டியில்' இடைவெளியின்றி கேட்டுக்கொண்டிருக்கும் நான்-ஸ்டாப் கொண்டாட்டம் ரெனோவின் சத்தம் மட்டுமே. அனைவருக்கும் பழகிப்போன அதே சமயம்  யாராலும் நிறுத்த முடியாத ஆட்டோமேட்டிக் அலாரம் சிஸ்டமாகவே மாறி இருந்தது.

3.குழந்தைகள் - 'ஏலியன்ஸ்' . நம்பர் ஒன் எதிரிகள். தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவரிடம் வேண்டுமென்றே சென்று வம்பு செய்தால் யாருக்கும் கோபம் வரத்தானே செய்யும். அதிலும் ரெனோவிற்கு கேட்கவே வேணாம் - சற்று அதிகமாகவே வரும்.ரெனோவை வம்பு செய்வதில் குட்டீஸ்களுக்கு அலாதியான பிரியம். பக்கத்து தெருவிலிருந்தும் வந்து கலாய்ப்பதும் கிண்டலடிப்பதும் தனக்கு எதிராக அரங்கேறும் குற்றமாகவே பார்த்தது. ஆனாலும் விட்டுவிடாமல் நீயா-நானா என்று பார்த்துவிட்டு தான் அடுத்த வேலையே. இப்படி ஆரம்பித்ததுதான் படிப்படியாக வளர்ந்து தற்போது முடிவுக்கு வராத மிகப்பெரிய 'ஈகோ' பிரச்சனையில் வந்து  நிற்கிறது. இந்தியா-பாகிஸ்தான் பார்டர் பஞ்சாயத்து கூட முடிவுக்கு வந்து விடும் ஆனால் இந்த 'சின்ன' பிரச்சனையின் முடிவு - கணிக்க முடியாத ஒன்று.

4.விருந்தினர்கள் - 'பீவேர் ஆப் மீ '. வீட்டுக்கு வெளியே நின்று பேசுவதற்கு கூட தடை சட்டம் அமலில் உள்ள போது வீட்டுக்குள் விருந்தாளிகளை அனுமதிப்பது எந்த யுகத்திலும் நடந்தேறுவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அப்படியே எதிர்ப்பை மீறி வீட்டுக்குள் வந்தவர்கள் ஏண்டா வந்தோம்?!?  என்னும் அளவிற்கு கவனிப்பு பலமாக இருக்கும். தில் இருப்பவர்கள் முயன்று பார்க்கலாம்.

5. பட்டாசு - 'ஸ்டிரிக்ட்லி  நாட் அல்லவ்ட்!'. நான் இங்கே தனி ஆளா கிடந்து திண்டாடுறேன் உங்களுக்கு என்னடா கொண்டாட்டம் வேண்டி இருக்கு என்று ஒவ்வொரு வெடி சத்தத்திற்கும் அசராமல் பதில் கொடுத்து கொண்டே தான் இருக்கும். ஆக மொத்தம் பட்டாசு சத்தத்தை காட்டிலும் ரெனோவின் அலறல்தான் அதிரடியாக இருக்கும்.

             இவை அனைத்தும் சின்ன சாம்பிள் மட்டுமே, பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வாறு செய்வதை எல்லாம் செய்துவிட்டு ஒன்றும் தெரியாததை போல 'நான் ரொம்ப நல்லவன்' என்ற பாணியில் சீன் போடும் ரெனோ நிஜமாகவே நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதும் உண்டு. இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் பல சமயங்களில் ஆறறிவு படைத்த விலங்குகளிடம் கூட எதிர்பார்க்க முடியாதது  ஐந்தறிவு கொண்ட விலங்கிடம் இயல்பாக அமையப் பெற்றிருந்தது - மனிதத்தன்மை!

             முகம் தெரியாத நட்பு, பெயர் தெரியாமல்  காதல் என்கிற ரீதியில் இது ஒரு புதுவிதமான நிகழ்வு. பொதுவாக அன்பு செலுத்துவர்களிடம் திரும்ப அன்பு செலுத்துவது இயற்கையின் நியதி. அன்பு செலுத்துபவர்களை புறக்கணிப்பவர்கள் தனி ரகம். ஆனால் எப்பவுமே கிடைக்கப்பெறாத அன்பிற்கு அடிபணிவது மிதமிஞ்சிய தன்மை - வெகு சிலருக்கே முடியும். ரெனோவின் இத்தகைய அரிதான பாசத்திற்குரிய நபர் ஒரு சிறுமி. எத்தனையோ சிறுவர் சிறுமியர்களை கண்டவுடனேயே தலை கால் தெறிக்க ஓட வைக்கும் ரெனோ இதுவரை பார்த்திராத இனிமேலும் பார்க்க இயலாத ஒருத்தர் மீது அளவுகடந்த அன்புடன் நடந்து கொள்வது அதிசயிக்கத்தக்கது.

          வைஷ்ணவி - பெயரைப்போலவே அவளும் அழகு. பள்ளி சென்றிருந்தால் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வயது.  அவளுக்கு மிகவும் பிடித்தது அமைதி. அவளால் உணர முடிந்த மன நிறைவை தரக்கூடிய ஒரே விஷயம் பாட்டு கேட்பது. வீட்டுக்கு வெளியே அவளை பார்க்கவே முடியாது. இருந்த இடத்திலிருந்து நகரவே மாட்டாள். எப்பொழுதும் அவளை பார்த்துக்கொள்ளவும் வேலைகளில் துணை புரியவும் அவளருகே  ஒருவராவது இருந்து கொண்டே தான் இருப்பர் ஏனென்றால் அவளால் மற்ற சராசரி குழந்தைகளைப்போல பேசவோ, சாப்பிடவோ, விளையாடவோ முடியாது. செய்யாத குற்றத்திற்காக பிறந்ததிலிருந்து தண்டனை அனுபவிக்கும் ஜீவன் ஆனால் நாள்தோறும் அன்பை மட்டுமே எதிர் நோக்கி தன் வாழ்கையை  உன்னதமாக  மாற்றி இருக்கிறாள். இந்த நிலைக்கு சமூகம் சூட்டிய பெயர் மாற்றுத்திறனாளி. ஒரு விதத்தில் உண்மை தானே?  நிறைந்த உடல் நலத்துடன்  நல்லறிவையும் பெற்றிருப்பவர்களுக்கு  அன்பின் மதிப்பை உணருவதற்கான திறன் வாய்ப்பதில்லை. எனவே வைஷ்ணவி இந்த விதத்தில் மட்டுமல்லாமல் எல்லா  நிலையிலும் ஸ்பெஷல் தான்.

              தன் தேவைகளை உணர்த்தவும் சந்தோஷம், கவலை போன்றவற்றை வெளிப்படுத்தவும் அவளறிந்த ஒரே மொழி மற்றும் வழி சத்தமாக அழுவது மட்டுமே. அப்படியிருக்க ஒரு நாளைக்கு இத்தனை முறை என்ற கணக்கேதும் இன்றி அழுகுரல் கேட்பது சில நேரங்களில் பலருக்கும் தொந்தரவாக அமைவது சகஜமே. விதிமுறைகளை அடுக்கி அவைகளை மற்றவர்கள் கடைபிடிப்பதில் குறை இல்லாமல் பார்த்து வரும் ரெனோ தான் பின்பற்றும் விதிமுறைகளை தளர்த்தி மென்மையாக நடந்து கொண்டது.

            ஒருமுறை வைஷ்ணவியின் அழுகுரல் கேட்டுவிட்டால் வேறு எந்த தலை போகிற பிரச்சனையில் மூழ்கி இருந்தாலும் அதனை தள்ளி வைத்துவிட்டு அழுகுரல் நின்ற பிறகே நிம்மதிப் பெருமூச்சு விடும். அவளை கவனிக்க ஆளில்லை என்றால் தானே போய் என்னவாயிற்று என்று பார்த்துவரும் அளவிற்கு நிலை கொள்ளாது அங்கும் இங்கும் சுற்றித்திரிவதும், அருகில் யார் இருந்தாலும் அவர்கள் பக்கம் வந்து சத்தம் வரும் திசையை கவனிக்க செய்வதும், கூக்குரல் கொடுத்து தானும் அழுவது என  யாரும் சொல்லிக்கொடுக்காமல் எந்த ஒரு பயிற்சியுமில்லாமல் ரெனோவின்  நியாயமான பாசத்திற்கு சான்றாகும் செய்கைகளில் சில.

             என்னதான் வீட்டின் பாதுகாப்புக்காகவும், சிலர் பிரியத்துடனும் வளர்க்க நேர்ந்தாலும் மனிதனை விட அறிவில் குறைந்த ஜீவனாக வலம் வரும் ரெனோவைப்போன்ற விலங்குகளை மட்டுமே விவரிக்க பயன்படுத்தும்  'நன்றியுள்ள' என்ற  அடைமொழி எக்காலத்துக்கும் அவற்றிற்கு கனக்கச்சிதமாக பொருந்தும். அப்படியிருக்க எந்த கணக்கின் அடிப்படையில் ஆறறிவு உயர்ந்தது?

!!!---!!!

Monday, December 17, 2012

பிடித்ததும்... படித்ததும்...


பிடித்ததும்... படித்ததும்...  
        
       கார்நேசன் முடிவெடுத்துவிட்டான். ஒரு மாதம். அதாவது இன்றிலிருந்து சரியாக 30 நாட்கள். நினைக்கும் போதே சிறு தடுமாற்றம். நிறைவேற்றிவிடுவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டா என்ற மனப்போராட்டம்.

              இந்த கசப்பான முடிவின் பின்னணியில் சில பேர்வழிகளின் வசைபாடல்களும் கோரத்தாண்டவமும் மட்டுமே அணிவகுத்து நின்றது. இவையன்றி வேறெந்தவொரு நியாயமான காரணமும் வலு சேர்க்கவில்லை.

             'பழகப் பழக பாலும் புளிக்கும்' என்ற கூற்று பழமொழி என்பதையும் தாண்டி பழைய மொழி என்றாகிவிட்ட இக்காலத்தில் அளவுக்கதிகமாக பழகியதனால் தான் என்னவோ கூடுதலாக பிடித்திருந்தது. மறப்பதற்கு மனமில்லை. பிடித்ததை நினைக்காமல், பார்காமலிருப்பது எளிதல்லவே. இருந்தும் ஒரு முயற்சி.

                 துவக்கத்தில் பெரிய மாற்றம் நேருமென்ற உணர்வேதுமில்லை. போகப் போக  ஊனின்றி உறக்கமின்றி இடைவெளி குறைந்து இணக்கம் மிகுந்தது. விளக்கை அணைக்காமல் கண் அயர்ந்த நாட்களில் கனவில் தொடர்ந்த கதைகளும் உண்டு. நடு இரவு கடந்து அதிகாலை வரை நீண்ட பரிமாற்றங்களில் பல விடியல் பொழுதுகள் புலர்ந்ததும் உண்டு .

                   வீட்டிலுள்ளவர்களின் அர்ச்சனைகளும் நண்பர்களின் கேலியும் கிண்டலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்க இசையவில்லை. பாவம்! அவர்களுக்கு எப்படி புரியும், அனுபவித்து உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புலப்படும் சுகம் அது.

             ஒரு நாளைக்கு 24 மணி நேரமென்பது அனைவருக்கும் பொதுவான நியதி. மணித்துளிகள் கரைந்தோடுவதும், சற்று அதிகமாக இருந்திருக்கலாமென தோன்றுவதும் இதிலகப்பட்டவர்களுக்கான இயல்பே. தடை செய்ததன் விளைவு, நேர்மாறாக இன்று ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம்போல கழிந்தது.

             
                எள்ளளவும் கவனம் சிதறாமல்,மற்ற எதிலும் கவனமில்லாமல் சென்று கொண்டிருந்த பிரகாசமான  பாதை திடீரென்று இருட்டடித்தது. சில சமயங்களில், 'உன் வாழ்வு உன் கையில்' என்பதை கடைபிடிப்பவர்களை விட 'உன் வாழ்வு முடிந்தவரை பிறருக்கு சந்தோஷத்தை கொடுத்து சங்கடத்தை தவிர்க்குமானால் அதுவே சிறந்த அறம்' என்பதை பின்பற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறவர்களே அதிகம். அதிலிருந்து தானும் தப்பவில்லை எனினும் இந்த முயற்சி மறுப்பதற்கோ மறப்பதற்கோ அன்று, ஞாபகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளவும் பிறருக்கு புரிய வைக்கவும் கிடைத்த 
ஆயுதமென நினைத்தான் கார்நேசன் .

           
         நிரந்தரமாக இணைந்திருக்க தற்காலிகமான சிறு பிரிவு அவசியமென்பதை உணர்ந்தவனாய் சிலர் தெரிந்தோ தெரியாமலோ தடைவிதித்தது தனக்கு செய்த நன்மையே என்றும் அத்தடையை துவம்சம் செய்து முன்னேறுவதற்காகவும்  நம்பிக்கையோடு காத்திருந்தான்.
 
             காத்திருப்பு வீண்போகவில்லை. இதோ 15 நாட்களுக்குப் பிறகு வந்தது ஆச்சரியம் கலந்த அதிர்ஷ்டம். அவன் பெயரில் இரண்டு பார்சல்கள். ஒன்று லேசாகவும் மற்றொன்று கனமாகவும் இருந்தது.

            முதலில் லேசான பார்சலை பிரித்தபோது கனமான மகிழ்ச்சி மனதில் ஒட்டிக்கொண்டது. அவனது  கனவு வேலைக்கான ஆர்டர் அது.

            கனமான கவரில் இருந்த விஷயம் அவன் மனதை லேசாக்கியது. 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே' என்ற குறிப்போடு வந்திருந்தது புத்தகப் பார்சல். என்றோ ஒரு நாள் சிறுகதை போட்டிக்காக 'புத்தகக் காதல்' என்ற தலைப்பில் தன் அனுபவத்தை எழுதியதற்காக  இன்று தக்க நேரத்தில் கையில் கிடைத்தது  பரிசு.

           தனக்கு முற்றுக்கட்டை போட்டவர்களின் முகத்துக்கு நேராக வேலைக்கான ஆர்டரை கொடுத்துவிட்டு, அரை மாதமாக நிறுத்தி வைத்திருந்த புத்தகங்களுடனான சிநேகிதத்தை புதுப்பிக்க முனைந்தான்.
                   
             புத்தகத்தின் மேல்புறத்தில் சிறிய வண்ணத் தாளில் எழுதியிருந்த குறிப்பு கார்நேசனின்  வாழ்க்கையை புதிய பரிமாணத்தில் வண்ணமயமாக மாற்றக் காத்திருந்தது. மீண்டும் ஒரு முறை அக்குறிப்பை படித்தான் - 'பிடித்ததையும் படித்ததையும் மறந்துவிடாதே'.அது அவனது மூளையில் பலமுறை எதிரொலித்தது.  

!!!---!!!

Monday, August 6, 2012

பொக்கிஷம்!


பொக்கிஷம்!

மண்ணைத் தோண்டி கடலின் தரைமட்டத்தில் புதையுண்டு கிடக்கும் தாதுக்களிலிருந்து, விண்ணைத் தாண்டி பிரபஞ்ச வெளியில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் வரை இயற்கை மறைத்து வைத்திருந்த அனைத்து ரகசியங்களையும் கண்டறிந்து கைவசம் வைத்திருந்த மனிதன் வாழும் தற்போதைய நவீனயுகத்தில் பிறந்த அதிர்ஷ்டசாலியான என் பெயர் ரித்விக்.

தற்போது பள்ளியில் பயிலும் மாணவன். பின்னாளில், அறிவியல் சார்ந்த துறையில் உலகம் போற்றும்படியான சாதனை புரியவேண்டுமென்ற லட்சியம் மனதோரம் குடிகொண்டுள்ளது. எப்பவும் எனக்கு முதல் இரண்டு நண்பர்கள் அம்மாவும் அப்பாவும் தான். அவர்கள் இருவரும் விண்வெளி அறிவியல் சார்ந்த துறையில் பணியாற்றுவதால், என்னுடைடைய இலட்சியத்தைப் பற்றி பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு தனியாக எத்தகைய காரணமும் தேவையில்லை.

ஒரு நாள் மாலைப் பொழுதில் பள்ளியில் இருந்து திரும்பிய நான், வழக்கமாக என்னுடைய வருகைக்காக ஆவலாக காத்திருக்கும் அம்மாவிடம் சென்று அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளவும் இல்லை, அப்பாவுடன் சேர்ந்து ஷட்டில் விளையாடவும் செல்லவில்லை. ஒருவித மனக்குழப்பத்துடன், நேராக எனது அறைக்கு சென்று ஓய்வெடுக்க விரும்பி, ஜன்னலின் ஓரமிருந்த எனது 'டபுள் காட்'டின் மேல் படுக்கையில் ஏறி படுத்து கண்மூடினேன்.

வீட்டில் யாரவது ஒருவருடன் சின்னதாக சண்டை போட்டால் மட்டுமே செல்லமானதொரு கோவத்துடன் நான் இப்படி இருப்பேன் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் நேற்றைக்கு அவ்வாறு ஏதும் நடக்காதபோதும் என்னுடைய இத்தகைய செயலுக்கு காரணம் புரியாமல் இருவரும் சற்று குழம்பி இருக்ககூடும், இருந்தும் எதையும் அத்தருணத்தில் பொருட்படுத்தத் தோணவில்லை.

எதிர்பார்த்தவாரே, என்னவாயிற்றோ என்ற பதற்றத்தில் என்னை காண வந்த அம்மாவும் அப்பாவும் நான் கூறிய காரணத்தை கேட்டதும் "ரித்து, ரொம்ப பயந்தே போயிட்டேன்! இதுக்கா இவ்வளவு பீலிங்?" என அம்மாவும் "சில்லி பாய், யோசி! ஒரு நல்லா ஐடியா கிடைக்கும்" என அப்பாவும் கூறியது, 'உன் ப்ராப்ளத்தை நீயே சால்வ் பண்ணிக்கோ' என்பதை சொல்லாமல் சொல்லியதுபோல் இருந்தாலும், ஒரு விதத்தில் 'இது ஒன்னும் நீ நினைக்கிறது போல் கவலை படும்படியானதொரு விஷயமும் இல்லை. உன்னால் முடியும்!' என்று நம்பிக்கை தரும் விதமாகவும் அமைந்து என்னை சகஜ நிலைக்கு மாற்றியது.

நான் கேட்ட வார்த்தை மாயாஜாலத்தின் விளைவாக தெளிவுற்று எனது தேவையை பற்றி மட்டும் முழுமையாக யோசனை செய்யத்துவங்கினேன். சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தாத்தா பரிசாக கொடுத்த 'புத்தகம்'. " இது அசாதாரனமான அபூர்வமான ஒன்று. உன் ஆசைகள் - நிழலாக இருந்தாலும் சரி கனவாக இருந்தாலும் சரி, இதில் சேகரித்து வைத்து தேவைப்படும் போது நிஜமாக மாற்றிக்கொள்ளலாம். தக்க சமயத்தில் இது உனக்கு துணை புரியும்" என்ற அவரது வாழ்த்துக்கள் இன்று உண்மையாகவிருப்பது த்ரில் கலந்த சஸ்பென்ஸ்ஸான சூழ்நிலையை உருவாக்கியது.

கொஞ்சம் விருவிருப்புடனும் பரபரப்புடனும் என்னுடைய அறையை புரட்டிப்போட்டு தேடியபோது, கப்போர்டின் மேல் அடுக்கில்,அழகாக கிப்டு பேப்பர் சுற்றிய அட்டைப்பெட்டியினுள் இருந்து, சிப்பிக்குள் இருக்கும் முத்தை தேடி எடுப்பதை போல் அந்த புத்தகத்தை தேடி எடுத்தேன். ஒரு விதத்தில் மட்டுமல்ல எல்லா விதத்திலும் இந்த புத்தகம் முத்தை விடவும் விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக மாறக் காத்திருந்தது .

காலையிலிருந்து என்னை துளைத்துக் கொண்டிருந்த கேள்விக்கான சரியான விடை இதுவன்றி வேறொன்றுமில்லை. வகுப்பறையில் "அன்றாடம் இயற்கையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக பிற்காலத்தில் மனித சமுதாயத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகவும், உலக அழிவிற்கு வித்தாகவும் அமையக்கூடும். அப்படியிருக்க இன்றைக்கு உள்ள நிலையிலாவது இயற்கையை பாதுகாத்து வருக்காலத்தினருக்கு ஒப்படைக்க ஒவ்வருவரும் என்ன செய்ய போகிறீர்கள்? புதுமையான அதே நேரம் செயல் படுத்தகூடியதுமான ஒரு விடை தான் எனது எதிர்பார்ப்பு" என ஆசிரியர் எழுப்பிய புதிருக்கு பதில் என் கைக்குள் இருந்தது.

இந்த புத்தகத்தை இருக்க அணைத்தவாறு, முதலில், இயற்கையின் எந்த பகுதியை பாதுகாக்க வேண்டும் என்ற கேள்விக்குறியுடன் ஜன்னலிலிருந்து வெளியே பார்த்த நொடியில் புலப்பட்ட நிஜம் - இரவு நேரத்தை குறிக்கும் கரிய நிறம், மேக கூட்டத்தினுள் தனது பாதி முகத்தை மறைத்து மீதி முகம் தெரியும் படி என்னை பார்த்து சிரித்த நிலாப் பெண், வானமெங்கும் சிதறிக்கிடந்து கண்சிமிட்டும் நச்தத்திரங்கள் - இந்த மூவர் கூட்டணி கொள்ளைகொள்ளாத மனமே இருக்க முடியாது. ஆதலால் முதல் பாதுகாப்பு இவற்றிற்கே.

மெதுவாக ஜன்னலின் வெளியே கையை மேல் நோக்கி நீட்டி இரவின் இருளை கை நிறைய அள்ளி சிந்தாமல் சிதறாமல் புத்தகத்தின் முதல் பக்கம் முழுவதும் தடவினேன். பின்னர், ஒரு கண் மூடி, இரு விரலை விரித்து, நிலவை அளவெடுத்தேன். விரலுக்குள் அடங்கிய நிலவை பத்திரமாக வானிலிருந்து பிரித்து எடுத்து பக்கத்தின் நடுவே ஒட்டினேன். அடுத்ததாக முடிந்த அளவு இரு கைகளிலும் நச்சத்திரங்களை அள்ளி, தனித்திருந்த நிலவுக்குத் துணையாக பக்கம் முழுதும் தூவி முடித்து பார்த்த பொழுது, சற்று முன் வெளியே தூரத்தில் தெரிந்த இரவு வானத்தை விட தற்போது கையிலிருந்த இரவு மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்ததை நம்ப முடியாமல், வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தேன்.

எனது ரசனை என்னும் தெளிந்த நீரோட்டத்தில் கல் எரிந்து கவனச்சிதறல் என்னும் நீரலைகளை உண்டாக்கியது, "ரித்து அங்கே என்ன செய்ற? இங்க ஒரு நிமிஷம் வந்து பாரேன்!" எனது அம்மாவின் பாசமான குரல். கீழே இறங்கி, சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் ஓடிய நான் நின்றது எங்கள் வீட்டின் பால்கனியில். அம்மா அப்பா இருவரும் வியந்து பேசி ரசத்துக்கொண்டிருந்தது நான் பார்த்து மகிழ்ந்த அதே காட்சியை தான்! "என்றுமில்லாமல் இன்று நிலா சற்று பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கிறது!", "என்ன காரணம்னு தெரியல ஆனால் பார்பதற்கு ரொம்ப ரொம்ப அழகாக, பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல உள்ளது" மாறி மாறி நிலவிற்கு புகழாரம் சூட்டிய தருணத்தில் கரண்ட் கட் ஆக, அந்த நிமிடம் எங்கள் அனைவரின் ரசனைக்கு மேலும் மெருகேற்றியது.

"இப்போ நாம சேர்ந்து ஒரு போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்?" அம்மா கேட்க, "செம ஐடியா! ரித்விக், கெட் மீ தி டிஜி கேம்" அப்பா சொல்ல, இப்படியொரு சந்தர்பத்தை மிஸ் பண்ண விரும்பாத நானும் விரைந்து சென்று கேமராவுடன் திரும்பினேன். சிரமப்பட்டு செட்டிங்க்ஸ் எல்லாம் மாற்றி - 'டே லைட் மோட்', 'ஆட்டோ க்ளிக்' என பலவற்றை அட்ஜஸ்ட் செய்து கரெக்டான ஆங்கிள்ல போகஸ் செட் செய்துவிட்டு வந்து என்னுடனும் அம்மாவுடனும் நின்றுகொண்டார் அப்பா. அவர்கள் இருவரும் அருகருகே நிற்க, அவர்களுக்கு முன் நின்ற எனது கழுத்தை சுற்றி தனது இரு கைகளையும் கோர்த்து தனது பக்கம் சிறிது இழுத்த அம்மாவின் செய்கையை பார்த்த அப்பா என் தோள் மீது ஒரு கையும் அம்மாவின் தோள் மீது ஒரு கையும் வைத்து அணைத்துக் கொண்டார். சமயோஜிதமாக செயல்பட்ட நடவடிக்கைக்காக அம்மாவும் அப்பாவும் ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க, இந்த ஆர்பாட்டத்தை பார்த்து பின்னயிலிருந்த நிலவும் சிரிக்க, நான் மட்டும் கையிலுருந்த பொக்கிஷம் தெரியும்படி கேமராவை நோக்கி கண்ணடித்து, 'தம்ப்ஸ் அப்' போஸ் காட்டி புன்னகைத்தேன். இது தான் பெர்பெக்ட்டான டைமிங் என்ன தனக்குத்தானே முடிவெடுத்த கேமராவும் சரியாக அந்த நொடியில் போட்டோவை பதிவு செய்தது.

அம்மாவும் அப்பாவும் நிலவை நோக்கி தங்களின் வர்ணனயை தொடர்ந்தவாரே எடுத்த நிழற்படத்தை ரசித்துக்கொண்டிருக்க, நானோ பொக்கிஷத்தின் முதல் பக்கத்திலிருந்த நிஜமான படத்தை ரசிக்கலானேன். இதே போல் வருக்காலத்தினரும் இயற்கையை மாசில்லாமல் ரசிக்க வழிவகுத்ததை எண்ணி மெய் சிலிர்த்தேன்!

!!!---!!!

Thursday, May 31, 2012

பிறந்தநாள் பரிசு


பிறந்தநாள் பரிசு


காலேஜ் போற நேரத்தைவிட காபி ஷாப்ல தான் அதிக நேரம் இருப்பாங்க இந்த கேங். என்ஜாய் பண்றதுக்கு ஏத்த சரியான இடம். எப்பவும் கிளாஸ் முடிஞ்சதும் அங்க தான் மீட்டிங். ஆனா இன்னைக்கு ஒரு ஸ்பெஷலான டே. கேங்ல ஒருத்தருக்கு பிறந்த நாள்னா சும்மாவா? அதனால இன்னைக்கு ஒரு நாள் கிளாஸ்ஸே அங்கதான்!

கேங் நேம் : குறிப்பிட்டு சொல்றதுக்கு எதுவும் இல்ல. ஆளாளுக்கு எப்படி எல்லாம் தோணுதோ அதுக்கு ஏத்த மாதிரி ஒரு பேர் வச்சு கூப்டுக்குவாங்க. கேங் மெம்பெர்ஸ் : இது ரொம்ப முக்கியம்! ஆகாஷ், வருண், சூர்யா, சந்துரு, தரணி என்ற ஐவர் பட்டாளம் பிளஸ் வசுந்தரா, மஹினா,ஹிரா, நிலா என்று மொத்தம் ஒன்பது பேர் கொண்ட கூட்டணி, கொஞ்சம் பெரிய கேங் தான்!

"யாராவது அவன பாத்தீங்களா?" காபி ஷாப்பில் உள்ளே என்டர் ஆகும் போதே கேட்டது வருணின் குரல்.

"யார பத்தி கேக்குற?" பதில் வசுந்திரா விடமிருந்து, காபியை குடித்து முடித்து விட்டு மெதுவாக கேட்டாள். மற்ற ஆறு பெரும் வருண்னை கண்டும் காணமல் காபியின் சுவையில் மூழ்கியிருந்தனர். பக்கத்தில் வேறு ஒரு கப்பில் 'கோல்ட் காபி' இருந்ததற்கான சுவடே இல்லாமல் கப் காலியாக இருந்தது. அது நம்ம ஹீரோ ஆகாஷ் அருந்தியதே.

"வேற யாரு? நமக்கெல்லாம் இன்னைக்கு ட்ரீட் வைக்கப்போரவனதான் தேடிட்டு இருக்கேன். எங்க போனானே தெரியல, கண்ணுலயே படாம சுத்திட்டு இருக்கான்!" வருண்.

"இவ்ளோ நேரம் இங்க தான் இருந்தான். இப்போ தான் எல்லாரையும் நைட் பார்ட்டிக்கு வீட்டுக்கு வரச்சொல்லிட்டு கிளம்பிட்டான்." நிலா .

"ஓ! அதுக்குள்ள எஸ்கேப்பா! அவன வீட்ல போய பாத்துக்கலாம்." சொல்லிட்டு கிளம்பிய வருனிடம், மஹினா "நாங்களும் கிளம்புறோம், கிப்டு வாங்கனும். ஸோ லெட்ஸ் ஆல் மீட் அகேயன் அட் ஆகாஷ்'ஸ் ஹோம் டுனைட்" கூறி விடை பெற்றது கேல்ஸ் கேங்.

டி-ஷர்ட், ஐ கியர், வாட்ச் என ஆளுக்கொரு கிப்டு செலக்ட் செய்து கொண்டிருக்கும் போது தற்செயலாக வந்த காலேஜ் ஜூனியர் ஷிவ்யா, "யாருக்கு கிப்டு? யாருடைய ட்ரீட்? டின்னர் எங்க?" என அவர்களின் உரையாடலை கேட்டு கேள்விகளை அடுக்கினாள்.

ஹிரா "இன்னைக்கு ஆகாஷுக்கு பெர்த்டே. ஸோ நைட் பார்ட்டி அவன் வீட்ல. டின்னர் அண்ட் ட்ரீட்டும் அவனுடையதே." என்ற பதிலுக்கு எதிர் கேள்வி "யாரு ஆகாஷ் ?!? உங்க பிரண்டா?" ஷிவ்யாவிடமிருந்து.

இதை சற்றும் எதிர்பாராத மஹினா "ஆகாஷ உனக்கு தெருஞ்சுருக்க சான்சே இல்ல, பட் அவனுக்கு உன்ன கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்! ஹி இஸ் மை பிரண்ட், கிளாஸ் மேட். ஆல்சோ யுவர் சீனியர்" நடந்துகொண்டே விளக்கத்தை தொடர்ந்தாள்.

"உயரமா ஆறு அடிக்கு கொஞ்சம் கம்மியா, அதற்கேத்த வெய்ட்டோட, கலையான முகம் அதுல இந்த நைட் நேரத்திலையும் 'சன் கிளாசோட', காதுல 'வயர்லஸ் எம். பி. பிளேயர்', லெப்ட் ஹேண்ட்ல 'பாஸ்ட்டிராக்', ரைட்ஹேண்ட்ல 'பிளாக்பெர்ரி' , புல்லா கலர்புல் காஸ்டியும்ல, எப்பவும் யாரையாவது கிண்டல் பண்ணிட்டு, வாய் மூடாம எதாவது பேசிட்டு, ரொம்ப எனர்ஜெடிக்கா கொஞ்சம் டேலன்ட்டடா, நிறைய பாய் பிரண்ட்சும் அதவிட நிறைய கேர்ள் பிரண்ட்ஸ் சுத்தி இருப்பாங்க, அவங்களோட சேந்து லைப்ப நல்லா என்ஜாய் பன்னுரவந்தான் ஆகாஷ் ... இப்போ எதாவது க்லூ கிடைச்சதா? நீ கண்டிப்பா பாத்திருப்ப " என நிலா முடிக்கும் முன் அவனது வீட்டிற்கு வந்துசேர்ந்திருந்தனர்.

அதே நேரத்தில் மற்ற நண்பர்களும் அங்கு வர "வா, ஆகாஷிற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு போகலாம்" என்று ஷிவ்யாவை வசுந்திரா அழைக்க, அனைவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தனர். வீடு முழுவதும் தேடியும் எங்கும் நம்ம பர்த்டே பாய்யை காணவில்லை. நேராக படி ஏறி மேலே சென்றால், அங்கே இரவின் குளுமையான தென்றலை தனிமையில் சங்கீதத்துடன் ரசித்துக்கொண்டிருந்தான்.

நண்பர்களை பார்த்ததும் "ஹாய் மச்சி.. வாங்கடா.." வரவேற்றவன் அவர்களின் பின்னே வந்த ஷிவ்யாவை பார்த்ததும் "ஹாய் ஷிவ்யா! என்ன இங்க?" என்றதும் அனைவரும் ஒரே கோரசாக 'ஓ' போட்டு ஒருவரை ஒருவர் பார்த்து குறும்பு புன்னகையை பரிமாறிக்கொண்டனர். "உங்களுக்கு வாழ்த்து சொல்லத்தான் வந்தேன்" என்ற ஷிவ்யாவிற்கு சிரம் தாழ்த்தி கை விரித்து தன் பாணியில் நன்றி கூறினான்.

சிறிது நேரம் அனைவரும் ஆகாஷை கலாய்த்து முடித்தவுடன் சூர்யா, சந்துரு, தரணி அண்ட் வருண் வாங்கி வந்த கேக்கை கட் பண்ணிய ஆகஷிற்கு பர்த்டே சாங் பாடினர் வசுந்திரா, மஹினா,ஹிரா, நிலா. பர்ஸ்ட் கேக் பீஸ், ஸ்பெஷல் கெஸ்ட் ஷிவ்யவிற்கு என்றதும் மீண்டும் ஒரு கோரஸ் 'ஓ' வானை பிளந்தது! அடுத்த வினாடி கேக் வெட்டியதற்கான அடையாளம் அனைவரின் முகத்திலிருந்த கிரீம் மாஸ்க்லிருந்தும் தரையெங்கும் சிதறிக்கிடந்த கேக் துண்டுகளிலிருந்தும் மட்டுமே புலப்பட்டது.

கலகலப்பான பர்த்டே பார்ட்டியின் அடுத்த கட்டம் கிப்ட்டிங் செஷன். கிப்டை கொடுத்து முடிக்கும் முன் அவை அனைத்தையும் பிரித்துப்பார்பதற்கு இருந்த ஆர்வமிகுதியினால் களேபரமே அரங்கேறியது. இதற்கிடையில் போட்டோ செஷனும் ஒருபுறம் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. க்ளிக்கியவற்றுள் ஷ்பெஷலானது சில : அதிசயமாக தனிமையில் இசையை ரசித்துக்கொண்டிருந்த ஆகாஷின் ஸ்நாப், ஷிவ்யாவிற்கு ஸ்டைலாக நன்றி கூறியபோது எடுத்த ஆகாஷின் போஸ் , கேக் வாங்கி வெட்டியதற்கு ஆதாரமாக புல் கேக் வித் கேண்டில்ஸ்ல கெடச்ச ஒரே ஒரு ஸ்நாப், ஒவ்வொருத்தரின் கிரீம் பேசியல் ஸ்நாப், கிப்டு கேளரியின் பின்னணியில் ஆகாஷின் க்ளோசப் புன்னகை ஸ்நாப் என லிஸ்ட் நீண்டு கொண்டே போக ஸ்பெஷல் கெஸ்ட்டான ஷிவயாவுடன் ஆகாஷ் பிடிவாதமாக சேர்ந்து நின்று எடுத்த போட்டோதான் ஹைலைட்டான பெர்பார்மன்சே.

நெக்ஸ்டு, டிரீட்டுக்கு ரெடியான அனைவரும் சேர்ந்து ஹோட்டலில் ரூப் கார்டனில் ரிசர்வ் செய்திருந்த டேபிளுக்கு சென்று ஆளுக்கொரு மெனு ஆர்டர் செய்து சாப்பிட்டு முடிப்பதற்குள் ஹோட்டலையும் ரெண்டு பண்ணிவிட்டனர். "கஷ்ட காலம்" என நொந்து கொண்ட வெய்டரிடம் "இதெல்லாம் சகஜம். என்ஜாய்மென்ட் கொஞ்சம் ஓவர்ராயடுச்சு. நீங்க கண்டுக்காதீங்க ப்ரதர். இதோ இப்போ கிளம்பிடுறோம்" என சமாளித்து எஸ்கேப் ஆவதற்குள் ஆகாஷிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

சங்கத்தை உடனே கலைக்க மனமில்லாமல் ஹோட்டலின் வெளியே இருந்த பார்க்கில் அமர்ந்து பேச முடிவெடுத்தனர். சூர்யா,"மச்சி! ரொம்ப நாளைக்கு அப்புறம் வி ஹேடு ஃபன் அஸ் எ கேங் டுகெதர் டா!" என ஆரம்பித்து அவரவர்களோட என்ஜாய்மென்ட் பீலிங்க்ஸ் எல்லாம் கொட்டி தீர்த்துவிட்டு, காபி ஷாப்பில் ஜாலியாக ஆரம்பித்த இந்த இனிய நாளை ஹாப்பி என்டிங்காக பார்க்கில் முடிவுக்கு கொண்டுவர ஆயத்தமாகினர். "ஓகே பார்ட்டி அட்டென்ட் பண்ண டயர்டுல நாளைக்கு கிளாஸ கட் பண்ணாம எல்லாரும் வந்து சேருங்க. அங்க மீட் பண்ணலாம்'' தரணி கூற மீண்டும் ஒரு முறை பிறந்தநாள் வாழ்த்தை ஆகாஷிற்கு உரித்தாக்கிவிட்டு அனைவரும் கிளம்பினர்.

ஆகாஷ் வீடு திரும்பும் வழியிலிருந்த ஏரியில் எப்போதும் சிறிது நேரம் செலவிடுவது வழக்கம். இன்றும் அங்கு சென்று அமர்ந்து தன்னுடைய இந்த நாளை பற்றிய நினைவுகளை அசைபோட்டான். எதிர்பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில் "பீப்" ஒலி கேட்டதும் மொபைலை எடுத்துப் பார்த்தவன் புன்னகையுடன் "ஹவ் வாஸ் யுவர் பர்த்டே" என்ற மெசேஜுக்கு "ஹேடு ஃபன் ஆல் தி டே வித் ஃப்ரெண்ட்ஸ். பட் தி மோஸ்ட் எக்ஸ்சைடிங் மொமென்ட் வாஸ் இன் தி நூன், வென் ஐ வெண்ட் டு குருகுலம் அண்ட் மெட் லிட்டில் கிட்ஸ் அண்ட் காட் தெயர் விஷ்சஸ். ஆல்சோ ஐ பாட் எ டிரஸ் ஆப் மை சாய்ஸ் அண்ட் பிரசென்ட்டெட் டு ஓனே ஆப் தி கிட் ஹு ஷேர்ஸ் ஹிஸ் பர்த்டே வித் மைன் டுடே! இட் வாஸ் ரியல்லி கிரேட் அண்ட் தேங்க்ஸ் பார் யூ ஹோல் ஹார்டேட்லி ஹு ஹேடு பீன் தி பிரைன் பிஹைன்டு தீஸ் லவுலி பீலிங் விச் ஐ வில் ரிஜாயஸ் பாரெவர்!" என்ற நீண்ட ரிப்லைக்கு " தட் இஸ் ஓகே. நத்திங் டு மென்சன் ஸோ மச். பர்த்டே விஷ்ஷஸ் ஓன்ஸ் அகைன். குட் நைட் :) " என்ற அடுத்த வந்த பதில் மெசேஜுக்கு "குட் நைட்" என்று அனுப்பிவிட்டு, தான் அளித்த பிறந்தநாள் பரிசினால் கிடைத்த புது அனுபவம் இந்த பிறந்த நாளை என்றென்றும் மறக்க முடியாததாக்கிவிட்டதை நினைத்து மகிழ்ந்தவாரே அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினான்.


!!!---!!!

Tuesday, February 28, 2012

HEAVEN OR HELL ?

HEAVEN OR HELL ?

Am slightly doubtful as how far this will turn out to be a victorious concept, but rather confident that something will be perceived only if tried for and cannot predict the result even before attempting it. Henceforth, I have been set all the way to plunge into action, making myself ready for the electrifying trial.

---

It was like as though I opened my eyes in the midst of deep meditation or a nightmare, surrounded by darkness and utter chaos, without a small clue of where am I present exactly. Am completely worn out, aged and this seemed to have occurred in no time.

Not sure whether it is the land or air, dream or reality and also couldn't make out whether am awake or asleep, in solitude or in crowd. Everything around created a brand new fresh feeling to sense! Unable to resist this weird experience, tried to get up and walk but with each step I took forward, things around moved front too. It took little time to realize that am going backward with every move made, which is contrary in nature.

Excitement along with wonder urged to know "Where the hell am I ?!?"

It wasn't the hell actually but an intuition prompted me this is going to be better in one way and worse in another way! Slowly dim light rays emerged from above while am on the move still, creating partial gloomy and cloudy sensation enabling to see through fractionally.

Suddenly from nowhere thousands of people approached me from opposite direction, chanting my name and showering their wishes at me. The whole area appeared to be filled with ecstasy, happiness and all sort of exaltation of spirit inducing one to be overjoyed.

Thrill increased with the reason for celebration not known. I endured a state of bewilderment yet enjoyed to the core being the center of attraction for such a massive merrymaking.

Then I observed a strange recurring thing. In all the directions my eyes gazed, there were shining flickering hoardings bearing felicitation for the achievement I have done. This also made me exhilarated as it seemed to be visible only for me since none other took notice of it, adding to the obscure situation prevailing.

Bypassing the throng am set anew to undergo next odd state. Here I saw enormously large buildings that constituted a city like impression. The facade of all edifice are more or less similar with infinite storied structure making impossible to know about the exact number of floors. My marching continued till am awestruck with the exquisiteness of one particular apartment which also attracted me with a profound familiarity.

Automatically I tend to explore that apartment which had splendid interiors rather than its exterior work. Each and every room bore the resemblance of research related place and has got one lengthy peculiar name inscribed on a hanging nameplate put in front of it, marking an identity. One such name caused me to come to a stand still and it was none other than my own name!

The unraveling mystery continued. "What is my part in such a vague spot?", question stimulated my sleeping mind to carve an answer for all the haphazard events occurring yet it rested again in vain since a conclusion could not be drawn.

Unable to resist this any further, entered and made a clear study of that room and also saw a random blurred visual in an enlarged screen in which I was seen working with a group of scientists showing series of images of Planets in varied angles, Satellites and telescopes of variety of shapes and structures and lot more theories and photos that remained connected to Solar system, Star system, Cosmos or Galaxy but didn't get a clear concept. Shock waves ran down through my spinal since the visual was played in a reverse order from the end to the beginning.

Exhausted of the same intolerable events I forced myself to move out of the place immediately in order to have a breath of fresh air. Next step waited ahead right in front of me making me to realize the fact that am not entirely out of the prevailing disorientation.

The shimmering miraculous daze made me to ramble and came to a halt by falling to the ground. Strained myself to return back to normal, wherein the existing dim light faded away little by little and vanished once for all leaving behind me in loneliness again.

---

Once when regained consciousness I found myself sitting in a dark room. After tedious attempt finally am able to pinpoint the issue behind the incoherent happening. But the task said to be accomplished is not in any way a cakewalk.

Being a scientist it had been my sought after wish to bring about a change in the normal working principle of living. For this purpose tried a concept only after retrieving myself out of my memory and experimenting with a most often demanded concept by people. They wish, Life would have been best if it provides us with a rewind or fast forward option, unknowing of the deadly consequences its hiding within it.

Trapped by the plot I tried for the same and now have landed in a turmoil. I have been undertaking a research to reinvent the universal rules to attain a complete solution for compensating the left of 3 days in February, 29 days occurring every 4 years else ending up with 28 days as the least.

The point to be noted is following the experimenting phase am now in a crucial situation to obtain a solution compulsorily which is damn sure to happen in future at any cost, as I have seen the after effects of it. For the same, suffering am yet to endure to bring it into real world concept will be horrible, dreadful, terrible or whatever worst it will be.

Be it a heaven or hell, I don't care for it in a range of bit or byte and I swear to pack up my research forever and move for dinner now!

!!!---!!!

Sunday, February 19, 2012

Coffee -Second Cup

DANCING GOATS:
The earliest credible evidence of either coffee drinking or knowledge of the coffee tree appears in the middle of the fifteenth century at Ethiopia. But the time line indicates that origin of coffee dates back to 1000BC when its existence came to be known and coffee was discovered at around 5AD. Ethiopian shepherds were the first to notice the effects of caffeine when they saw their goats become frisky and dance after eating the coffee berries. So the dancing goats were believed to be the reason behind the discovery of coffee.

NAMEOLOGY - 'CHAUBE TO COFFEE':

The first ever name given to coffee was CHAUBE in 1573. The word coffee in English is derived from the Dutch word koffie, one possible origin is from the kingdom of kaffa, where the coffee plant actually originated. Our tempting topic has got other fascinating names to its credit including 'cup of joe', 'jave', 'kona', 'dessert', 'columbia', 'java', etc some of which are indigenous. This black drink replaced wine in many religious ceremonies because it kept the mohammedans awake and alert during their nightly prayers, so they had honored it with the name coffee, they had originally given for wine.


BOTANICAL SPECIES:
The two main species of coffee beans are 1.Arabica and 2.Robusta. 70% of the world consumes Arabica coffee which is mild and aromatic, the remaining 30% drinks Robusta which is more bitter tasting but has 50% more caffeine than Arabica.


ALPHABETICAL ALLURING:

Besides, there are infinite varieties of coffee, starting with almost all alphabet found decorating the menu cards at cafes. Let us have a look at those tongue catchers names in order Affogato, Americano, Black coffee, Caffee Americano, Cafe aun lait, Cafe breva, Caffe latte, Caffe macchiato, Cafe mocha, Cappucino, Double shot, Dry cappuccino, Espresso, Flovored coffee, Frappee, Flat white, Frappuccino, Greek coffee, Hammerhead, Iced coffee, Indian (Madras) filter coffee, Instant coffee, Irish coffee, Kopi tubruk, Lungo, Liqueur coffee, Macchiato, Melya, Mocha, Naked coffee, Oliang/oleng, Ristretto, Turkish coffee, Vietnamese style coffee, White coffee and the list extends.

BEWARE OF THIS:

Among all these the notable variety is the LIQUEUR COFFEE hiding shots of various forms of liquor within it which has its own including Australian coffee, Brandy coffee(Brandy), Bailey Irish coffee,Calypso coffee(Rum), Caffe correto, Corfu coffee, English coffee(Gin), Jamaican coffee(Rum), Kaffee fertig, Monk's coffee, Russian coffee(Vodka), Seville coffee(Cointreau), Witch's coffee(Strega),etc. So never be carried away by the fashionable names, but be aware before placing your order.


OUTCOME AND INTAKE:
Worlds largest coffee producing country is
1.Brazil (28% of total annual international yield) 2. Colombia (16%) 3. Indonesia (7%)

The country which tops in coffee consumption is Finland (12 kg of per capita consumption).USA occupies 27th position with 4.2 kg [A simple comparison because we will be satisfied only after knowing USA's position in everything]. Our Motherland India is the least coffee consuming country(0.1 kg) sharing the position with 15 other countries.
Being the leading producer of coffee - Brazil occupies 17th position and the land of origin of coffee - Ethiopia occupies only 69th position in coffee intake.


BEAN BELT:
All coffee in the world grows in the BEAN BELT, the area between Tropic of Cancer and Tropic of Capricorn extending about 1000 miles. Coffee grows in trees! Yes, they can be grown up to 30 feet tall but are cultivated to be around 10 feet tall (3 meters) for easy picking.


COFFEE SHOTS:

Coffee berries with fat formed edible energy balls and it was originally eaten by African tribes. The light roasted coffee bean has rich caffeine content than the dark roasted bean, because more the bean are roasted more caffeine is cooked out of it.
Light and dark roasted beans


BRAIN WAR:

In our brain there is something called adenosine and it only wants to hang out with certain receptors. When these two get together people get drowsy. When caffeine shoes up it attaches to the receptors so that adenosine cannot. Pituitary gland on seeing this thinks there is an emergency, so it tells the adrenal gland to produce adrenaline the result of which we are deprived of our drowsiness and feel like being energetic.


ARTISTIC EXCELLENCE:
After the preparation of hot cuppa, now it is time to serve the delicious, pertaining as a feast not only to tongue but for the eyes too.

"As with art 'tis prepared, so better to taste with art"
After getting on with the art and taste one could not lock lips from extending from left to right like this.
What we have seen is art with a cup. How about having a look at a fantastic masterpiece of art where 3604 cups of coffee is made into a giant Mona Lisa at Sydney, Australia. Those 3604 cups were each filled with different amount of milk to create different shades.

FINAL TOUCH:
The making of coffee has come a long way from origin to art, now it is time for sharing. Hope you would enjoy every sip of it.
"A cup of coffee shared with a friend is happiness tasted and time well spent".

After knowing the whereabouts of coffee, love towards coffee increases, such that could not stop enjoying even the last drop. Though the consequences of having it all alone remains shilly-shally, sure you won't mind it.

:)How abt the taste of my coffee:)

Friday, February 17, 2012

Sorry?!?

ஸாரி?!?



வாரத்தின் இறுதி நாள். மிஸ்டர் மேத்தா அன்றும், ஃபோனும் கையுமாக பிசியாக இருந்தாலும் உள்ளத்தின் பூரிப்பு முகமெங்கும் சிரிப்பாக வெளிப்பட்டது. "கண்டிப்பாக வந்துடனும். யெஸ், யெஸ். நாளைக்கு ஈவினிங்க் தான்" தன் நட்பு வட்டாரங்களுக்கும், தொழில் ரீதியான முகவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பர்சனலாக அழைப்பு விடுத்தார்.

சனிக்கிழமை மாலை 6 மணி - ஹோட்டல் 'ஸ்பெண்ட் பார்சியூன்.'

அனைவரையும் முன்னின்று இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். இதனைப்போல பார்ட்டிகளெல்லாம் புதிதல்ல என்றாலும், என்றுமில்லாத மிதமிஞ்சிய மகிழ்சியுடன் மேத்தா காணப்பட்டதற்கு காரணம் தன் குடும்பத்துடன் நெடு நாட்களுக்குப்பிறகு நேரம் செலவிடமுடிந்ததும், அதற்கு வழிவகுத்த லாபகரமான தொழில்யுக்தியும் (' மேக்ஸிமம் பிராபிட் ஆப் தி குவார்டர்' ).

அனைவரின் பாராட்டுகளும், வாழ்த்துகளும் நிறைவை தந்த பொழுதும் கையில் வைத்திருந்த குவலையிலிருந்த அருமருந்தே மேலும் மனநிறைவை தருவதைப்போல் உணர்ந்தவர் விடாது தொடர்ந்தார் இரவு வரை.

மறுநாள். முன்தினம் வந்திருந்த அனைவரும், அதில் விட்டுப்போனவர்களும் கூட வந்திருந்தனர். சற்று மாறி இருந்தது இடமும் அவர்களின் உணர்ச்சியும் மட்டுமே.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி - ஹாஸ்பிட்டல் 'ரீகெயின் ஹெல்த்'.

ஒருவரது வரவுக்காக காத்திருந்த அனைவரும் தொலைவில் மற்றொருவரது முகம் பார்த்ததும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஆனால் முகம் வாடிய நிலையில் வெள்ளை ஆடை அணிந்திருந்த அவர் சொன்னார் "லிவர் பெயிலியர். ஸாரி!"

யார் செய்ததற்கு யார் சொல்வது - "ஸாரி?!?"





!!!---!!!

Wednesday, December 14, 2011

YOU AND ME

YOU AND ME

You are within me, yet
Am wandering without you!

You know everything about me, but
I know scarcely a little about you!

You guide me through ups and down, but
I don't even care to stand and stare!

You teach me how to overcome obstacles, but
I always put objection to your suggestion!

You command me to act according to rules, yet
I ignore you often to meet the reality!

You make me realize what life is, yet
Am unable to express life in your way!

You acclaim me forever ,but
I abstain from accepting it!

You strive hard to be present with me ever, but
I neglect your presence everywhere!

You keep on coming as my absolute well wisher, but
I treat you as an obsolete!

It is obvious that you and me are inseparable, yet
it is difficult to fulfill the disparity that set us apart!

Regardless of all the controversies...,
still you are within me,
my amicable CONSCIENCE!

Tuesday, November 22, 2011

தாய்-அம்மா

தாய் -அம்மா

சுபமங்கள மஹாலில் நாளைய முகூர்த்தத்திற்கான வேலைகளை ஒருபுறம் மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தார் நவநீதன். அன்றைய தினம் மாலை நிகழவிருக்கும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிடும் தருவாயில் இருந்தது.

வரவேற்பு பந்தலில் சந்தனம் குழைத்து, இனிப்புகள் நிரப்பி, ரோஜா மலர்களை பரப்பி,பன்னீரை குவளையில் நிரப்பி இவற்றை முறையாக எடுத்துவைப்பது முதல்அடுப்பங்கரையில் கேசரியின் இனிப்பும், இட்லி சாம்பாரின் காரமும், ஐஸ்கிரிமின் ஜில்லென்ற தன்மையும் பதமாக உள்ளதா என பார்ப்பது வரை எல்லா காரியங்களையும் சுழன்று சுழன்று கவனித்தாள் தாய்யம்மா.

இடையிடையே மணமகள் அறையினுள் கவனத்தை செலுத்தி ஏதேனும் அழுகுரல் கேட்கிறதா என்பதை கண்டறிந்து, எந்த தொந்தரவும் இல்லாமல் குழந்தையின் சிரிப்பு சப்தம் கேட்டால் நிம்மதி பெருமூச்சுடன் தனக்கென உள்ள ஆயிரத்தி எட்டு வேலைகளில் முழ்கிடுவாள்.

திருமணம் நிகழவிருப்பது ரிடயர்டு தாசில்தார் நவநீதனின் மகள் கயல்விழிக்கு. அவளிடம் முழுஉரிமை தந்தையைவிட, தாயயம்மாவுக்கே அதிகம். தான் பெறவில்லை எனினும் இருபத்திமுன்று வருடம் வளர்த்தவள் ஆயிற்றே . அந்த வீட்டில் தாயம்மாள் வேலை செய்தால் என்றாலும் நவநீதானிடம் மிகுந்த மரியாதையும் கயலிடம் அளவற்ற பாசமும் கொண்டிருந்தாள். கயலும் தாயம்மாளை அம்மா என்றே அழைத்தாள்.

நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில் நவநீதன் கயல்விழியை அழைத்து வருமாறு கூற தாயம்மாள் அறையினுள் சென்று மணமகள் அலங்காரத்திலிருந்த கயல் தன் குழந்தை ஆனந்தியோடு விளையாடுவதை நோக்கினாள். தாயம்மாள், கயல் தன்னிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டவுடன் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்து நிச்சய தாம்பூலம் மாற்றுவதை கண்டு மனதார வாழ்த்தி மகிழ்ச்சியுற்றாள்.

இனி மற்றவைகளை நவநீதனிடம் விடுத்து அறைக்கு திரும்பி தன் குழந்தை உறங்குவதை உறுதி செய்தவள், களைப்பு மிகுதியால் தானும் ஒரு மூலையில் படுத்து கண் அயர்ந்தாள்.மண்டபத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த வாத்தியங்களின் இசையோ, திரளாக வாழ்த்த வந்திருந்த மக்களின் ஆரவாரமோ அவளது ஆழ்ந்த தூக்கத்தை கலைக்கவில்லை.

ஆனால் திடீரென்று அழத்தொடங்கிய தன் குழந்தையின் குரல், வெளியே நிலவிய களேபரத்துடன் ஒப்பிடும் போது மெல்லியது தான். அப்படியிருக்க அந்த சினுங்கல் எவ்வளவு விரைவாக உடுருவிச்சென்று அவளது தூங்கிக்கொண்டிருந்த மூளையை தட்டி எழுப்பியதோ தெரியவில்லை, நொடிப்பொழுதில் கண்விழித்து குழந்தையை வாரி அணைத்து சமாதானப்படுத்தினாள், " என்னம்மா, என்ன ஆச்சு என் அம்மாவுக்கு! என் ஆனந்தக் கண்ணம்மா!! என் தாயம்மா!!!" என்று.

!!!---!!!

Monday, October 31, 2011

CORRUPTION

CORRUPTION

CORRUPTION - The term which should have been eroded long back, even without knowing glimpse of its existence, has become a fashionable term of the era, with its roots - strong and wide spread, finding firm grip deep in the history posing threat to mankind more than a century thereby protruding into the future making it dark as well.

Though there seems to be plentiful of measures to curb this menace out of the mind of people and few are overwhelmingly involved in the process of throwing out this evil term, the results and remedies are not as flourishing as intended to be.

The prime reason which hurdles, is the political supremacy of those whose are explicitly in want of power along with riches. Gone are the days when we used the definition 'Democracy means government of the people, for the people and by the people'. The exact present is in the clutches of plutocrats.

"Power does not corrupt men;fools, however, if they get into a position of power, corrupt power" is George Bernard Shaw's view.

Yet this cannot be the only reason for such an enormous rotten state prevailing today. Only when analyzing from inside out, the genuine truth could be hit, as put forth by Eric Hoffer,

"It has often been said that power corrupts. But it is perhaps equally important to realize that weakness too corrupts. Power corrupts the few while weakness corrupts the many. Hatred, malice, rudeness, intolerance and suspicion are the faults of weakness. The resentment of the weak does not spring from any injustice done to them but from their sense of inadequacy and impotence."

The reason behind all this destruction and devastation does not lie with someone else or somewhere around but within everyone and everywhere around.More than caste, creed or religion the slow poison that is creating diversification among the people is 'money'. Now the cold war is between 'haves' and 'have nots' in all sector.


People have been brainwashed to be slaves in their way of living but decently, making themselves lost for the smell of money.The rational thinking of people is the only entity to avoid even a pin hole of adverse effect but the case here is completely reverse creating large pit falls for themselves.

This is not in any sense an easy task to be done just like that, unless and until, each and everyone is unconditionally willing to abide by the simple rule - surrendering ourselves against corruption, thus putting a full stop to the long running catastrophic disaster and continuing with a comma for the progression of human race globally! .

Wednesday, September 28, 2011

BELIEVE IN YOURSELF!

BELIEVE IN YOURSELF!

Being human, we must be full of pride for we are of capable of turning all our desires into reality. Nevertheless, the whole concept remains a mystery as how many are aware of this. We can never sustain in the present changing world just alone with the righteous thought, without bearing in mind that every dream has to be accomplished before it is too late. The spark which serves for this attitude is ' BE inspired and aspire to BE'.

The thought which inspires oneself should be truly realistic and not a mere fantasy. "Nothing is more dangerous than an idea, when you have only one idea" applies rightly to this concept. Rather than being star-struck or taking up the stinking idea of following the dreams of other personalities, it is always better to have deep passion in exploring ideas that is resting in peace, deep within each and everyone, because in one way or the other it will lead to the ultimate destiny visualized by our great leaders for the upliftment of oneself or society or nation or whatever it is concerned with.

From Swami Vivekananda to Dr.A.P.J. Adbul Kalam, all have been the strong driving force thereby contributing to the attainment of key note - developed India. In every aspect, the core of focus relies on none other than youth. Henceforth, it is time to think, think, think and plunge into action, marching towards the goal.

"If you only do what you know you can do - you never do very much"
Hence in order to show the world who we are, the foremost thing required is doing things that we are interested in, than with the wandering thought of whether to take up or not.

Nothing and no one can stop us from emerging if we are determined to take up tools for our assistance like self-awareness, self esteem, self confidence, self interest, self motivation, self improvement, self involvement, self trust, self determination and self will, all of which must be exhibited full fledged as though we are the overall possession of such things.


Serious attention should be paid, to see that we do not overshoot, else it would mess up with the entire idea.

Let us resurrect and project ourselves into limelight by idolization and achieving our very own dreams making an epitome for the generations to come.

Life is only once and it is true only when you are you. So love it and live it to the fullest but never leave it just like that!

Wednesday, September 14, 2011

பணக்காரன்!

பணக்காரன்!



ரெடாரென்டினுள் நுழைந்தான் தர்மா. மணி இரவு 8:30 என்று காட்டியபடி சுழன்றது கடிகாரமுள். "வெயிட்டர்" என்றழைத்து தனது டின்னருக்கான மெனுவை "ஒன் பர்கர் அண்ட் ஒன் மினி கோக்" என கூலாக ஆர்டர் செய்தான். எனினும் ஒருவித சலனத்துடன் அடிக்கடி பர்ஸை எடுப்பதும் பணத்தை எண்ணுவதுமாக இருந்தான்.


மெனு வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வெயிட்டரும் வந்தான் '48 ரூபாய்' பில்லுடன். எண்ணி சரியாக ரூபாய் எடுத்து வைத்துவிட்டு தன்னுடைய பைக்கில் விரைந்தான்.


புத்தகம்படிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தவன்பக்கங்களின் இடையே சில்லறை காசை 'புக்மார்க்'காக வைக்கும் பழக்கமிருந்ததை நினைத்து பெருமிதம் கொண்டான். அப்படி அனைத்து புத்தகங்களிலிருந்தும் சிரமப்பட்டு தேடி எடுத்து வநதது தான் தற்போது கையிலிருந்த 49 ரூபாய்.


தெருக்கோடியை அடைந்தவுடன் செல்போன் சிணுங்கியது . மறுமுனையில் "இன்னைக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள அசெயின்மன்ட் ஒண்ணுல கையெழுத்து போட்டிருக்கேன். நீ சீக்கிரமா ஊருக்கு வந்திரு . நீதான் அதை பார்த்துக்கனும். அப்புறம் நீ கேட்ட பணத்தை இன்னைக்கு போட முடியல. நாளைக்கு காலைல பணம் உன் கையிலிருக்கும்". பதிலாக "சரிப்பா" என்ற ஒற்றை சொல்லுடன் தொடர்பை துண்டித்தவன் "அய்யா! தர்மம் பண்ணுங்க" என்னும் குரல் கேட்டு திரும்பினான்.


மீதமிருந்த ஒற்றை ரூபாய் நினைவுக்குவந்ததும் அதை எடுக்க பர்ஸை திறந்தவனை பார்த்து சிரித்தன உள்ளிருந்த நான்கைந்து .டி.எம் கார்டுகள். அதனை பொருட்படுத்தாது ஒற்றை ரூபாயை முதியவருக்கு கொடுத்துவிட்டு சிறு புன்னகையுடன் தெருக்கோடியை கடந்து இருப்பிடம் நோக்கி புறப்பட்டான்.



!!!---!!!