Showing posts with label பத்மா மகன். Show all posts
Showing posts with label பத்மா மகன். Show all posts

Friday, November 25, 2011

புலம்பல்கள்

புலம்பல்கள்

கண்ணை விற்று ஓவியம் வாங்கி இருக்கிறோம்...

இக்கரைக்கு அக்கரை பச்சை....
-தமிழ்நாடு

கன்னிப்பெண் கண்ணீர் சிந்த
நீதிபதி களியாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்..
-பாரதம்..

ஊர் பற்றி எரிகிறது
மன்னன் பிடில் வாசிக்கிறான்...
-பாரதம்
-ரஞ்சித்குமார்

பாமரன்

பாமரன்

இது ஒரு அழகிய கூத்து
அழுகிய நாத்து.....

கறை படியாத மேகங்கள்
கருமை நிறமில்லா காகங்கள்.....

அணிந்தவன் நிர்வாகி
அணிவித்தவன் நிர்வாணி .....

பங்கு போட்டுத்தான் பந்தி
பாமரன் நிற்கும் இடம் சந்தி.....

தேடி சொன்னால் பல கோடி
தெருவில் கண்டது சில கோடி.......


மொத்தத்தில் ஒரு மாயத்தோட்டம்
ஆயிரம் மான்கள் கூட்டம்....

உண்மையை சொல்பவன்
தீவிரவாதி....

உரைத்ததை சொல்பவன்
தேசத்துரோகி......



பாமரன் ஞானியாகிறான்
பாரத தேசத்திலே.....

தகுதி:
18 வயது
வாக்காளர் அடையாள அட்டை..

நானும்
இன்று பாமரன்
நாளை ஞானி.......


தேவை பட்டால்
என் மீதும் பாயும்..

தே. பா.ச.


- ரஞ்சித்குமார்




Wednesday, September 21, 2011

அவளுக்காக...

அவளுக்காக...

கோபம் வந்தால்
கசக்கி தூக்கி எறிகிறாய்,
குப்பைத் தொட்டியில்
காகிதமாய் கண்ணீர்
சிந்திக்கொண்டே...,

பாசம் வந்தால்
குப்பைத் தொட்டியின்
அருகே குடித்தனம்
இருக்கிறாய்,
குழந்தையாக ......

கோபத்தில் முகம் சிவந்தால்
என் மனைவியாகிறாய் ,
ஆசையில் மனம் மகிழ்ந்தால்
என் மழலையாகிறாய்..

உன் கண்ணீர் பட்டால்
நான் நனைந்து போகிறேன்
இல்லை இல்லை
நான் அணைந்து போகிறேன்..

மாறிவிட்டேன் என்கிறாய்
ஆமாம்
உன் பித்தனாக இருந்தேன்
பக்தனாக மாறிவிட்டேன்..

விண்ணின் ஒரு துளி நீர்
ஊற்றெடுக்காது ,
உன் விழியின் ஒரு துளி
பாறை என்னுள்ளே
ஈரம் கசிய செய்கிறது..


ஒருவர் அன்புக்கு மற்றவர்
ஏங்கி அழுகின்றனர் காதலர்கள்,

ஆனால்

அவர்களின் காதலோ???

இன்பத்தில் களியாட்டம்
ஆடிக் கொண்டிருக்கிறது..

தனக்கு அழிவில்லை என்பதை எண்ணி...

-கி.ரஞ்சித்குமார்.

Friday, September 16, 2011

தலைமுறை தாண்டி...



தலைமுறை தாண்டி...

வயது ஐந்துக்கு மேல்,
அப்பா இழுத்துச் சென்றார்
கேட்காமலே கிடைத்தது
மிட்டாய் ,

கண்களில் பயம்
கண்ணீர் ஊற்றுடுக்க
அமர வைத்தார்கள்
பாசமாய் பேசி
தன் பணி முடித்தார்...

அந்த சவரத் தொழிலாளி....

வயது வாலிபம் ஆனது
பேஷன் தெரியாது என
அடுத்தக் கடைக்கு மாறினாலும்,
அந்த நாளின் பாசத்திற்காக
அவ்வபோது முகச் சவரம் மட்டும்...

இன்று என் மகன்
குழந்தையாக...

பேஷன் வேண்டாம்
அன்பான தொழிலாளி வேண்டும்
மீண்டும் என் பால்ய
சவரத் தொழிலாளி......

நாளை??

என் மகனும் இதே தான்

காலங்கள் கடந்தாலும்
தலைமுறை கடந்து
நிற்கிறார் அந்த

சவரத் தொழிலாளி.....

அவர்க்குத் துணையாக..

அந்த உடைந்த நாற்க்காலி....


-ரஞ்சித்குமார்






Friday, August 12, 2011

பித்தனின் வரிகள்

பித்தனின் வரிகள்.....


அன்பின் அணுவே,

ஆசையின் கருவே,

இன்பத்தின் இருப்பிடமே,

ஈருலகம் வெல்லும் வீரமே,

உருக்கையும் கரைப்பாய்,

ஊன்றுகோலாய் நிற்ப்பாய்,

எத்தனையோ விதம் உன்னில்,

ஏற்றோர்க்கு வாழ்வு இனிக்கும்,

ஐயமில்லா நீ இல்லை,

ஒரு உள்ளம் கானது,

ஓர் உலகம் போதாது
,

ஒளடதம் நீயோ? அழுகின்ற மனதிற்கு,



அடி அடியில் அறிவு

சொன்னால் ஆத்திச்சூடி எனலாம்,



சொல்லத்தான் பொருளில்லை

பொருள் தரும் சொல்லில்லை


மனம் மேல் ஆசை வந்தால்

காதல் எனலாம்,

காதல் மேல் காதல் வந்தால்
?



கிணற்றுத் தவளை

என்னுள்ளம் -கிண்ணத்து தேனில்

கிரங்கிய சிற்றெறும்பாய் மாற,


என் நிலை யாரிடம் கூற..?



பாட்டெழுத தெரியாது

பா விருத்தம்
புரியாது



மனம் கண்டு மை கொண்ட

இவ் வரிகளுக்கு மண்ணவர்

தரும் பொருள் யாதோ?



-கி.ரஞ்சித் குமார்

Tuesday, August 9, 2011

பாதையல்ல... பள்ளிக்கூடங்கள்...

À¡¨¾ÂøÄ... ÀûÇ¢ìܼí¸û...
*«¾¢¸¡¨Ä
§Å¸Á¡ö ¿¼ìÌõ ¦À¡¢ÂÅ÷¸û,
§Å¸Á¡ö ¸¼ìÌõ §ÀôÀ÷ ¨ÀÂí¸û...
«Å÷ º¡ôÀ¢ð¼¾¡ø
þÅý º¡ôÀ¢Îžü¸¡¸...

*šɧÁ ܨáö
À¡¨¾§Â ÀÕ쨸¡ö
§À¡¨¾Â¢ø À¡¨¾ ÁÈó¾
ÌÊÁ¸ý¸û...

*¬§Ã¡ì¸¢ÂÁ¡É ¸£¨Ã¨Â
ÜÅ¢ Å¢ü¸¢ýÈ¡û...
«ó¾ ¬§Ã¡ì¸¢ÂÁ¢øÄ¡
㾡ðÊ...

*¾¡Á§¾§Á þø¨Ä
«ÁÇ¢Ôõ þø¨Ä
«Ãí§¸Úõ «Ãº¢Âø ÁýÈí¸û
¦¾Õ§Å¡ÃòÐ Ë츨¼...

*²§¾¡ ´Õ ã¨Ä¢ø
¸Ä¡îº¡Ãò¾¢ý «¨¼Â¡ÇÁ¡ö
¬ÚÒûÇ¢ §¸¡Äõ...

*À½ì¸¡Ã ¿¡¼¡¸¢
Ţ𧼡§Á¡?
º¢øÄ¨ÃìÌ ºô¾Á¢Îõ
À¡ø¸¡Ãý...

*¬¾ÅÛõ ŢƢ츢ýÈ¡ý
¯Â÷ ¸ðʼí¸û º¢¡¢ì¸¢ýÈÉ...
*¸Õ¿£Ã µ¨¼Â¢ø
þÕºì¸Ã À¼Ì¸û...
º¢ìÉø Å¢Øó¾Ð...

*Á¡¢Â¡¨¾Â¡¸
«ó¾ ¿¡Ç¢ý Ó¾ø Å¡÷ò¨¾
"³Â¡...?"
´ü¨ÈåÀ¡ö,
"¿£í¸ ¿øÄ¡ þÕ째¡Ûõ º¡Á¢"
Ó¾ø ¬º¢÷Å¡¾õ...

*³ò¾¢§Ä§Â ŨÇóÐÅ¢ð¼¡ø
³õÀÐ ÍÄÀÁ¡õ...
¾ûÇ¡ÊÉ¡û «ó¾
ÀûÇ¢ìܼ º¢ÚÁ¢...

*°¡¢ø ÁîÍ Å£Î
¦ÀÕõ ÀÉ측Ãý
¸¡¨Ä¢ø ¿¢ýÈÀÊ
¿¡‰¼¡ ÓÊò¾¡ý
¿¸Ãõ Åó¾ ¿¡§¼¡Ê¡ö...

*Á¾¢Âõ
º¡¨Ä¢ø §Å¨Ä¢ø¨Ä...
*Á¡¨Ä ¦¿Õí¸¢ÂÐ...
Á¨Æ ÓÊó¾ Á¾¢Âõ §À¡ø
´Õ ÁñÅ¡º¨É...
º¡¨Ä¸û ¬ì¸¢ÃÁ¢ôÒ...

*¨¸§¸¡÷ò¾ ¸¡¾Ä÷¸û
¸¼ü¸¨Ã §¿¡ì¸¢...

*¾¡Â¢ý ÁÊ¢ø
ÀûÇ¢ìܼ º¢È¡÷¸û...
*ţΠ¾¢ÕõÒõ §Å¸ò¾¢ø
º¡¨Ä Å¢¾¢ ÁÈó¾ ÁÉ¢¾÷¸û...

*С¢¾Á¡ö ¦¾¡¼í¸¢ÂÐ
С¢¾ ¯½Å¸õ...

*¸¨Ç¸ðÊÂ
¨¸§Âó¾¢ ÀÅí¸û...

*§Ã¡ð§¼¡Ãì ¸¨¼Â¢ø
¸¡Ä¢Â¡Ìõ ¦¸¡ÍÅò¾¢
ÍÕû¸û...

*þ¼õ ¸¢¨¼ò¾ ¿¢õÁ¾¢Â¢ø
À¢Ç¡ðÀ¡Ã ¦À¡¢ÂÅ÷...

*àì¸õ ¦¾¡¨Äò¾
þÃ×ì ¸¡ÅÄ÷¸û...
*¾¡Á¾ò¾¢üÌ ÁýÉ¢ôÒ
§¸ðÌõ Á¨É¡Çý¸û...

*À¢û¨ÇìÌ ¬Ú¾ø
¦º¡øÖõ ¾¡ö... ±É

Ó¸í¸û ¿Êò¾¡Öõ,
ÁÉí¸û
¾¢Éõ §¾Îõ Å¡ú¨¸Â¢ø
¾¢Éô §À¡Ã¡ð¼í¸û

¦Á¡ò¾ò¾¢ø,

¸¡¨Ä Ó¾ø þÃ× Å¨Ã
¸¼óÐ ¦ºøÖõ
À¡¨¾¸û «øÄ «¨Å
¿õ¨Á ¸ü¸î ¦º¡øÖõ
ÀûÇ¢ìܼí¸û...!

Sunday, June 19, 2011

Arrear

அரியர்
அது என் அறை தானா?  எனக்கே குழப்பம் காரணம் அவள் அழகுப் பதுமையாக என் அருகே,அவளிடம் இருந்து அவளுக்கு தெரியாமல் நான் சேகரித்த காதல் சின்னங்களை காண்பித்தேன்.. 

  எதோ ஒரு இனம் புரியாத இன்பம் எங்களுக்குள்ளே,வீட்டில் யாருமில்லை அதனால் என் உள்ளத்தில் பயம் (சலனம் சிறிதுமில்லை காரணம் அனுபவித்தவர்களுக்கே புரியும்) 

  இதயம் புல்லட் ரயிலை மிஞ்சி ஓடிக்கொண்டிருந்தது அனால் அவளுக்குள் காதல் வெள்ளம் கண்களையும், இதழையும் மதகுகளாக கொண்டு வெளியேறின. எப்படியோ அவள் மடியில் தலை வைக்க அனுமதி கிடைத்தது,இதயத்தின் புலம்பலை முகத்தில் காட்டாமல் தலை சாய்த்தேன்..

  டிக். டிக், 

  ஐயோ... யாரோ வந்து விட்டார்கள், முடிந்தது என் காதல் கதை, மானம் போகப் போகிறது ஒரு பைசா தரமாட்டார்கள் இனி, நம்பமாட்டார்கள்....(நினைத்துக் கொண்டிருக்கும்போதே..) 

  மீண்டும்... டிக், டிக், கண் விழித்தேன் கதவைத்திறக்க... "எல்லாரும் போயாச்சு ,அடுத்த தடவையாவது அரியர் கிளியர் பண்ணுவியா??.." காதில் மட்டுமே கேட்டன வரிகள், அனால் உள்ளுக்குள் என் காதல் யாருக்கும் தெரியவில்லை,நிம்மதியாய் தேடினேன் கல்லூரி வளாகத்தில் அவளை.........