Showing posts with label Mahesh Ramasamy. Show all posts
Showing posts with label Mahesh Ramasamy. Show all posts

Friday, July 8, 2011

மம்பி

மம்பி

மேற்கு வங்கம், நாடியா மாவட்ட அரசு மருத்துவமனை. அவசர சிகிச்சை பிரிவு என பெங்காலியில் எழுதப்பட்ட அறை முன் ஏழ்மை படிந்த ஒரு குடும்பம் தன் மகள் மம்பி-யை எண்ணி கண்ணீருடன் காத்திருந்தது.

12 வயது சிறுமி மம்பி பூச்சிகொல்லி குடித்து தற்கொலைக்கு முயன்றதாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

கண்ணில் ஒன்றை இழந்த தந்தை மிர்துள் சர்க்காரும், சிறுநீரக குறைபாடு உள்ள சகோதரன் மனோஜித்திற்கும் மேலும் ஒரு இடியை தந்தது மம்பியின் தற்கொலை முயற்சி!

நொடிகள் கரைய... கரைய... செவிலிகளின் வாட்டமும்... டாக்டரின் அமைதியும் அக்குடும்பத்திற்கு மம்பியின் சாவை அப்பட்டமாக தெரிவித்தது. இயலாமையில் மிர்துள் தரையில் புரண்டு அழ ஆரம்பித்தான். மம்பி இழப்பை ஏற்க நேரம் தேவைப்பட்டது அவனுக்கு.

உடலை அங்கிருந்து கிடத்தி அவளது கிராமத்திலேயே புதைக்கப்பட்டாள் மம்பி!

இரண்டு நாள் கழித்து மிர்துள் மம்பி-யின் கையெழுத்தில் ஒரு சீட்டை கண்டான். அதில் அவள்,

"நான் இறந்துவிட்டால், என் உறுப்புகளை தந்தைக்கும் சகோதரனுக்கும் கொடுங்கள்! " என்று பிழையுடன் எழுதியிருந்தாள் மம்பி.


----XXXX----


Thursday, June 23, 2011

தோழர்கள்

நேரம் வந்துவிட்டது!

இரவு மணி 9.30. துள்ளி எழுந்து என் கடை கதவுகளை மூட ஆரம்பித்தேன். இனி கடைசி பேருந்தை பிடித்து 30 கி.மீ தொலைவில் உள்ள என் கிராமத்து வீட்டிற்கு செல்ல வேண்டும். நான்கு திங்களாக இதுவே வழக்கம் என்பதால் வாழ்க்கை சற்று வெறுப்பாக இருக்கிறது.

நேரம் நெருங்குவதால் குடி மக்களின் தாகம் தீர்க்க பச்சை கடையில் அலையடித்தது. அந்த வேடிக்கை எனக்கும் தாகத்தை உண்டாக்க , கூட்டத்தில் ஒருவனாய் ... தீர்த்தம் பெற்றேன் ( வென்றேன் ) . 


தீர்த்தத்தின் தாக்கத்தால் பேருந்தில் தள்ளி அமர்ந்தனர் எல்லோரும். என் நிறுத்தம்! பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டேன்.

என் தடத்தில் என்னை கண்ட நாய் ஒன்று தன் காதை விடைத்து எனக்கு எச்சரிக்கை செய்தது. ஏனோ அருகில் என்னை கண்ட அது இயல்பாக தன் குட்டிகளுடன் விளையாடத்துவங்கியது. துணை இன்றி நடக்கும் எனக்கு ஒரு வழி தோழன்.

என் பாதையில் ஒர் நூறு அடியில் மீண்டும் ஒரு எச்சரிக்கை!!

வெள்ளையாய் இரு பெண் பிம்பங்கள். நான் வெடவெடத்து அங்கேயே நின்றேன். எங்களுக்குள் இடைவேளை குறைய... அங்கே! மல்லிகை பூ... கால் கொழுசு... பெரிய பொட்டு... என்ற இலக்கணமில்லா ஒரு சுடிதார் பேயும் அதன் தோழி ஜீன்ஸ் பேயும்!

அவைகள் (அவர்கள்) தங்களுக்குள்,


"இவண்டி! இன்னிக்கும் லேட்டா வராண்டீ! ".

Friday, April 15, 2011

நானும்..! என் காதலியும்..!

நானும்..! என் காதலியும்..!


நான் அவளுக்காக காத்திருக்கிறேன்.

மாலை நேரம்... அவள் வருவதாக சொன்ன பூங்கா... இன்று என் காதலியிடம் என் காதலை சொல்லபோறேன்.

எங்கிட்ட ரோஜா இல்ல. க்ரிட்டிங் கார்டு கூட இல்ல. நம் பெண்களுக்கு கேட்பரி சாக்லேட் பிடிக்கும் என்பது பொது விதி. அவளுக்கும் பிடிக்கும். ஒரு 'கேட்பரி' யுடன் உட்கார்ந்திருக்கிறேன் அவள் வருகைக்காக... நானும் இந்த 'கேட்பரி' மட்டும் காத்திருக்கல... அந்த சைக்கிள் பழகும் குழந்தை, சென்ற கணம் இறந்து சாலையில் கிடக்கும் இந்த மஞ்சள் பூக்கள்.. வாழ்ந்து முடித்த வாக்கிங் தாத்தா.. ஏன்னா அவளை நான் மட்டும் ரசிக்கல. இங்க எல்லாம்.. ஏன் அவள பார்த்திருந்தால் நீங்களும் ஒரு கேட்பரியுடன் என் பக்கத்தில் உக்கார்ந்திருப்பீங்க. அவ அவ்வளவு அழகு.

பவித்ரா.. அவ பேரு. இரட்டை கோபுரத்தை இடிச்ச ஒசாமா கூட அவளை பார்த்தால் தாஜ்மஹால் கட்டுவான்!. அவ தான் அழகு.. அது தான் அழகு. அவ பின்னாடி வருபவர்கள் எங்கேயாவது இடிச்சுக்குவாங்க.. அது ஏன்னு அவ பின்னாடி நடந்த பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன். அவ கலரு ஆசையா இருக்கும். கண்ணு உருண்டையா இருக்கும். ஒரு அருவி பேசினா எப்படி இருக்கும்!.. அவ அப்படித்தான் பேசுவா.

அவள எனக்கு என் கல்லூரி ஆரம்ப நாட்க்களில் இருந்து தெரியும். இறுதி ஆண்டு இன்று வரை என் உயிர் தோழி அவள். உங்களுக்கு ஒன்னு தெரியுமா..அவளை கட்டிபிடுச்சுருக்கேன்... ஒன்னா பெட்ல தூங்கியிருக்கேன்... அவ உள்ளாடையை கூட என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்.. அவ்வளவு நெருக்கம் அவளிடம்.

அவ எப்போதும் சிரிச்சிட்டே இருப்பா. எப்போழுதாவது அழுவாள். கெட்ட வார்த்தை கூட பேசுவாள். அழகாக எழுதுவாள். அவ கூட இருந்தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கும் . அவ கூட இருந்து அவள காதலிக்கலைனா தான் அது ஆச்சரியம்.

இன்னிக்கு என் காதலை சொல்லனும்னு முடிவு பண்ணிட்டேன். இந்த காதலை சொல்லாம தூக்கத்தில் கனவு கூட வரமாடேங்குது. அவளிடம் எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ஆனால் அவளது ஆடை கடந்த சுதந்திரம் வேண்டும். அவள் என் காதலியாக.!

இதோ அவ வரமாதிரி தெரியுது. அவ தான். தேவதையாய் வெள்ளை சுடிதாரில் வராலே! அவ தான் பவித்ரா. என் காதல் எதுவும் தெரியாமல் வரா சிரிச்சுக்கிட்டே. கொஞ்சம் பயமா இருக்கு. நானே என் காதலுக்கு தடையா இருக்கேனோ ?..

ஆம் நானும் ஒரு பெண் தானே!

Click here if you like this..