Sunday, June 19, 2011

Arrear

அரியர்
அது என் அறை தானா?  எனக்கே குழப்பம் காரணம் அவள் அழகுப் பதுமையாக என் அருகே,அவளிடம் இருந்து அவளுக்கு தெரியாமல் நான் சேகரித்த காதல் சின்னங்களை காண்பித்தேன்.. 

  எதோ ஒரு இனம் புரியாத இன்பம் எங்களுக்குள்ளே,வீட்டில் யாருமில்லை அதனால் என் உள்ளத்தில் பயம் (சலனம் சிறிதுமில்லை காரணம் அனுபவித்தவர்களுக்கே புரியும்) 

  இதயம் புல்லட் ரயிலை மிஞ்சி ஓடிக்கொண்டிருந்தது அனால் அவளுக்குள் காதல் வெள்ளம் கண்களையும், இதழையும் மதகுகளாக கொண்டு வெளியேறின. எப்படியோ அவள் மடியில் தலை வைக்க அனுமதி கிடைத்தது,இதயத்தின் புலம்பலை முகத்தில் காட்டாமல் தலை சாய்த்தேன்..

  டிக். டிக், 

  ஐயோ... யாரோ வந்து விட்டார்கள், முடிந்தது என் காதல் கதை, மானம் போகப் போகிறது ஒரு பைசா தரமாட்டார்கள் இனி, நம்பமாட்டார்கள்....(நினைத்துக் கொண்டிருக்கும்போதே..) 

  மீண்டும்... டிக், டிக், கண் விழித்தேன் கதவைத்திறக்க... "எல்லாரும் போயாச்சு ,அடுத்த தடவையாவது அரியர் கிளியர் பண்ணுவியா??.." காதில் மட்டுமே கேட்டன வரிகள், அனால் உள்ளுக்குள் என் காதல் யாருக்கும் தெரியவில்லை,நிம்மதியாய் தேடினேன் கல்லூரி வளாகத்தில் அவளை.........

2 comments:

  1. இடம் தவறிய முற்றுப்புள்ளிகள்...
    சிறிய பிழைகள்...
    நெருடலாக உள்ளது!

    ReplyDelete
  2. Very Good Sudden Fiction...Right Editing will make it even better..

    ReplyDelete