Wednesday, September 21, 2011

அவளுக்காக...

அவளுக்காக...

கோபம் வந்தால்
கசக்கி தூக்கி எறிகிறாய்,
குப்பைத் தொட்டியில்
காகிதமாய் கண்ணீர்
சிந்திக்கொண்டே...,

பாசம் வந்தால்
குப்பைத் தொட்டியின்
அருகே குடித்தனம்
இருக்கிறாய்,
குழந்தையாக ......

கோபத்தில் முகம் சிவந்தால்
என் மனைவியாகிறாய் ,
ஆசையில் மனம் மகிழ்ந்தால்
என் மழலையாகிறாய்..

உன் கண்ணீர் பட்டால்
நான் நனைந்து போகிறேன்
இல்லை இல்லை
நான் அணைந்து போகிறேன்..

மாறிவிட்டேன் என்கிறாய்
ஆமாம்
உன் பித்தனாக இருந்தேன்
பக்தனாக மாறிவிட்டேன்..

விண்ணின் ஒரு துளி நீர்
ஊற்றெடுக்காது ,
உன் விழியின் ஒரு துளி
பாறை என்னுள்ளே
ஈரம் கசிய செய்கிறது..


ஒருவர் அன்புக்கு மற்றவர்
ஏங்கி அழுகின்றனர் காதலர்கள்,

ஆனால்

அவர்களின் காதலோ???

இன்பத்தில் களியாட்டம்
ஆடிக் கொண்டிருக்கிறது..

தனக்கு அழிவில்லை என்பதை எண்ணி...

-கி.ரஞ்சித்குமார்.

3 comments:

  1. MAARIVITEN YENGIRAI
    AAMAM
    PITHANAGA IRUNTHEN
    UN BAKTHANAGA MAARIVITEN...........

    VERY NICE LINES DA

    ReplyDelete
  2. உன்னுடைய அவளுக்காக,
    நீ புனைந்த காதல் மடல்,
    அருமை...

    ReplyDelete