Sunday, May 29, 2011

புதுவரவு!!!

புதுவரவு !!!

கண்மூடினேன். சிந்தனையில் நிழலாடின இருபத்தைந்து வருடங்கள். ராகுலை முதன்முதலாக பார்த்து வீட்டிற்கு அழைத்துச்சென்றது, பள்ளி நாட்கள், கல்லூரி காலங்கள், அவன் வகிக்கப்போகும் மத்திய அரசுப்பணி அனைத்தும் பரவசம்கலந்த மனநிறைவை தரும் மனவோட்டமாக மாறியிருந்தது.

அந்த ஆனந்த தருணத்திற்கு இடையூறு விளைவிக்கும் விதமாக என்னிடம் கையொப்பம் கேட்கப்பட்டது. இங்குதான் என்றில்லாமல் நீட்டிய இடத்திலெல்லாம் கையொப்பத்தைப் பதிவுசெய்து ரெஜிஸ்டரை என்முன் அமர்ந்திருந்த அழுவலரிடம் கொடுத்தேன்.

மனம் அவன் வரவுக்காக அலைபாய்ந்து தவித்தது. இனி வரவிருக்கும் என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் நிகழ்ந்தது அந்த நிகழ்வு..
தத்தி தத்தி நடந்து வந்து தன் பிஞ்சு கரங்களால் என் விரல் பற்றி புன்னகைத்தான் என்னுடைய ராகுல்.
!!!---!!!

1 comment:

  1. I loved reading it.
    A Good example for a perfect 'Sudden Fiction' story.

    ReplyDelete