Sunday, September 4, 2011

வெற்றி ?

வெற்றி ? 

தாஜ் ஹொட்டலின் ஒரு சிறிய அறையில் இந்தியாவில் உள்ள அத்தனை வர்த்தக ஜாம்பவான்களும் கூடியிருந்தனர். மதிப்பிற்குறிய அத்த்னை நிருபர்களுக்கு முன் ஜெய்ராமிற்கு பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது. 

ஆசியகண்டத்தின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த சந்தோஷத்தில் மலர்ந்த முகத்துடன் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தான் ஜெயராம். 

“நான் என் வாழ்கையை பூஜியத்தில் தொடங்கினேன். என் தந்தை எனக்காக விட்டுப்போனது இறுபது கோடி ருபாய் கடன் மட்டும் தான். பணம் என்பது எல்லோர்க்கும் அத்தியாவசியம். எனக்கு உயிர்மூச்சு. இன்று நான் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரன். இது வெறும் ஷேர் மார்க்கட்டில் ஏற்பட்ட சுழற்ச்சியால் கிடைத்த வெற்றியல்ல. இதற்காக நான் பல விஷயங்களை இழந்ததிருக்கிறேன். பல நாள் தூக்கம், பல வேளை சாப்பாடு, என் குடும்பத்துடன் நான் செலவு செய்திருக்க வேண்டிய பொன்னான நேரங்கள். ஆனால் இன்று நான் அடந்த வெற்றி, என்னுடை அத்தனை இழப்புகளையும் ஈடுசெய்துவிட்டது.”

நிருபர், “ உங்களுடைய அடுத்த இலக்கு?” 

“உலகத்தின் நம்பர் 1 பணக்காரன்!” என்று ஜெயராம் பதிலளித்த வேளையில் ஜெயராமின் மனைவி லதா, அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து ரமணிச்சந்திரன் நாவல் படித்துக்கொண்டிருந்தாள்.

3 comments:

  1. 'Vetri?' - Without doubt in anyway is 100% utter tholvi for Jayaram here and for all other similar man of affairs elsewhere with the same mentality!

    ReplyDelete
  2. " புரிந்தருள் செய்கின்ற போகமா சத்தி
    இருந்தருள் செய்கின்ற இன்பம் அறியார்,
    பொருந்தி யிருந்த புதல்விபூ வண்ணத்து
    இருந்த இலக்கில் இனிது இருந்தாளே "

    ReplyDelete
  3. @ Mahesh Ramasamy: Great Lines from Thriumoolar. and Very rightly used. Thanks for the comments

    ReplyDelete