Monday, March 14, 2011

Pichchaiyedungal !



பிச்சையெடுங்கள்….


உங்கள் முகம் வேண்டாம் எனக்கு
மனதை பிச்சையிடுங்கள்…..
மண்டியிட்டு கேட்கிறேன்…..
மனதில் பணக்கட்டுகளாய் மகிழ்ச்சி
இல்லாவிட்டாலும் சிரிப்புச்
சில்லரைகளையாவது சிலருக்கு
பிச்சையிடுங்கள்…!
திருவோட்டில் ஒற்றை நாணயம் போல்
இருந்தாலும் சரி உண்மையான ஒரு
உறவையாவது உலகிற்க்கு
பிச்சையிடுங்கள்…….!
உங்கள் மனதைநோக்கி
கேட்கிறேன்;
கன்னியமான அன்பை
பிச்சைதாருங்கள்..
என் கல்லறையில்
பதித்து வைக்க…….!
காலத்தின் ஓட்டத்தில் உங்களுக்கு யாரும்
உறவுப் பிச்சையிடமாட்டார்கள்,
உயிரில்லாமல் வாழ்ந்தாலும்
உறவில்லாமல் வாழமுடியாது……!
ஓடி பிச்சையெடுங்கள்;
ஓயாமல் பிச்சையெடுங்கள்;
உண்மையான உறவுகளைத்
தேடி காலமெல்லாம்
பிச்சைக்காரர்களாய் இருப்போம்…
தவறில்லை…………!
கி ரஞ்சித் குமார்

3 comments:

  1. Yethai ellamo yosikaamal pitchaiedukum indha kaalathil,
    kaalathaal azhiyaatha mahathaana onrai pitchai eduka sonnathaal,
    itho mudhal nabaraaga naanae thuvangukiraen - pitchaiyeduka...

    ReplyDelete
  2. Naan pichchai poadavum thayaar !!!

    ReplyDelete
  3. soooper....gud one ranjith...nalla pichai eduthirukinga nu theriyuthu :P

    ReplyDelete